மேலும் அறிய

NEET UG 2022: “நீட் தேர்வை ஒத்தி வைங்க” - 10 ஆயிரம் தேர்வர்கள் என்டிஏவுக்குக் கடிதம் - காரணம் என்ன?  

2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்.சி. உள்ளிட்ட சில துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

 

"கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் இருந்து நீட் தேர்வுக்குத் தயாரானோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான மாப் -அப் கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தைப் பெறக் காத்திருக்கின்றனர். ஏப்ரல் முதல் வாரத்தில் மாப் - அப் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், எந்த இடமும் கிடைக்கவில்லை. 

ஏராளமான மாநிலங்களில் மாநிலக் கலந்தாய்வு இன்னும் முடிவடையவில்லை. 2021ஆம் ஆண்டுக்கான நீட் கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், நிறைய மாணவர்களால் தங்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு சதவீதம் குறித்துக் கணக்கிட முடியவில்லை. அடுத்த 3 நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 6ஆம் தேதியே, 2022 ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் 2022 தேர்வு நடத்தப்படும் என்று  தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்த்து. 

இதனால் நீட் தேர்வை ஏற்கெனவே எழுதியவர்களும் புதிதாக எழுத உள்ளவர்களும் 2022 நீட் தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் இருக்காது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா 2ஆவது அலை காரணமாகத் தேர்வு தள்ளிப் போனது. அதனால் இந்த முறையும் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும். 


NEET UG 2022: “நீட் தேர்வை ஒத்தி வைங்க” - 10 ஆயிரம் தேர்வர்கள் என்டிஏவுக்குக் கடிதம் - காரணம் என்ன?  

அதேபோல க்யூட் தேர்வு ஜூலை முதல் மற்றும் 2ஆவது வாரங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இவை அனைத்துக்கும் இடையில் நீட் தேர்வுக்குத் தயாராவது மாணவர்களுக்குக் கடினமான சூழலை ஏற்படுத்தும். 

எம்பிபிஎஸ் படிப்பது என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாகவும் பெற்றோர்களின் உணர்வாகவும் உள்ளது. ஆசிரியர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். எனினும் உரிய காலம் இல்லாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் கனவை விட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது. 

இதனால் போதிய கால அவகாசம் கொடுத்துத் தேர்வை நடத்தினால், மாணவர்களால் நீட் தேர்வுக்கு சிறப்பாகத் தயாராக முடியும்". 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதுகலை நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget