மேலும் அறிய

NEET UG 2022: “நீட் தேர்வை ஒத்தி வைங்க” - 10 ஆயிரம் தேர்வர்கள் என்டிஏவுக்குக் கடிதம் - காரணம் என்ன?  

2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்.சி. உள்ளிட்ட சில துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

 

"கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் இருந்து நீட் தேர்வுக்குத் தயாரானோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான மாப் -அப் கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தைப் பெறக் காத்திருக்கின்றனர். ஏப்ரல் முதல் வாரத்தில் மாப் - அப் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், எந்த இடமும் கிடைக்கவில்லை. 

ஏராளமான மாநிலங்களில் மாநிலக் கலந்தாய்வு இன்னும் முடிவடையவில்லை. 2021ஆம் ஆண்டுக்கான நீட் கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், நிறைய மாணவர்களால் தங்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு சதவீதம் குறித்துக் கணக்கிட முடியவில்லை. அடுத்த 3 நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 6ஆம் தேதியே, 2022 ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் 2022 தேர்வு நடத்தப்படும் என்று  தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்த்து. 

இதனால் நீட் தேர்வை ஏற்கெனவே எழுதியவர்களும் புதிதாக எழுத உள்ளவர்களும் 2022 நீட் தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் இருக்காது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா 2ஆவது அலை காரணமாகத் தேர்வு தள்ளிப் போனது. அதனால் இந்த முறையும் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும். 


NEET UG 2022: “நீட் தேர்வை ஒத்தி வைங்க” - 10 ஆயிரம் தேர்வர்கள் என்டிஏவுக்குக் கடிதம் - காரணம் என்ன?  

அதேபோல க்யூட் தேர்வு ஜூலை முதல் மற்றும் 2ஆவது வாரங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இவை அனைத்துக்கும் இடையில் நீட் தேர்வுக்குத் தயாராவது மாணவர்களுக்குக் கடினமான சூழலை ஏற்படுத்தும். 

எம்பிபிஎஸ் படிப்பது என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாகவும் பெற்றோர்களின் உணர்வாகவும் உள்ளது. ஆசிரியர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். எனினும் உரிய காலம் இல்லாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் கனவை விட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது. 

இதனால் போதிய கால அவகாசம் கொடுத்துத் தேர்வை நடத்தினால், மாணவர்களால் நீட் தேர்வுக்கு சிறப்பாகத் தயாராக முடியும்". 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதுகலை நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget