மேலும் அறிய

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?

புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகிய ஆசிரியர்கள் இருவருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான விருது . 

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது, தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகிய ஆசிரியர்கள் இருவருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான விருது அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விருது பெறும் ஆசிரியர் தங்கராஜ் ஏபிபி நாடு கூறும்போது,

  1. மாணவர் வளர்ச்சிக்காக

- கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம்.

- மாணவர்களின் கற்றலை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற Storytelling, Games, Art Integrated Learning, Activity Based Learning போன்ற முறைகளைப் பயன்படுத்தினேன்.

- தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த தொடர்ந்து செயல்பட்டேன்.

- மாணவர்களின் தன்னம்பிக்கை, பேச்சுத்திறன், படைப்பாற்றல் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டேன்.

- யோகா, சிலம்பம், கபடி, கோ-கோ, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் இணைப்புச் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தினேன்.

- டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேலும் சுவாரஸ்யமாக மாற்றினேன்.

  1. பள்ளிக் கட்டமைப்புக்காக

- மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்க பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்தேன்.

- வகுப்பறைகளுக்கு Smart TV, Projector, Interactive Board உள்ளிட்ட டிஜிட்டல் கற்றல் வசதிகளை ஏற்படுத்தினேன்.

- மாணவர்களுக்கு தேவையான மேசைகள், நாற்காலிகள், பாய்கள், Green Boards மற்றும் கல்வி உபகரணங்களை சமூகத்தின் உதவியுடன் பெற்றுத் தந்தேன்.

- பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை அழகுபடுத்தும் பணிகளையும் மேற்கொண்டேன்.

- மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடல் வளர்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுத் தந்தேன்.

- மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கழிப்பறை வசதி ஏற்படுத்துவதற்காக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை பெற்றேன்.

  1. சமூக பங்களிப்பு

- பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்தேன்.

- பல்வேறு நன்கொடையாளர்களின் உதவியைப் பெற்று பள்ளிக்குத் தேவையான வசதிகளை உருவாக்கினேன்.

- பள்ளி என்பது ஆசிரியரின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்பதை நடைமுறையில் உருவாக்க முயற்சி செய்தேன்.

  1. மாணவர்களுக்கான எனது உறுதி

- எந்த மாணவரும் வறுமையின் காரணமாக கல்வியில் பின்தங்கக் கூடாது.

- ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

- கல்வியுடன் ஒழுக்கம், தன்னம்பிக்கை, திறமை மற்றும் சமூகப் பொறுப்பும் வளர வேண்டும்.

- கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது தொடர்ந்த இலக்கு.

  1. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்ததன் நோக்கம்

“இந்த விருதைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் நான் இந்தப் பணிகளைச் செய்யவில்லை. நான் பணியாற்றும் கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி மூலம் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அந்தப் பணிக்கான ஒரு அங்கீகாரமாக இந்த தேசிய நல்லாசிரியர் விருதை நான் பார்க்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து!

விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ’’மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது. இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!’’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget