மேலும் அறிய

MoE Survey: பள்ளிக்கு நடந்தே செல்லும் 48% மாணவர்கள்; ஆதரவில்லாமல் 25% : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் பள்ளிகளுக்கு 48% மாணவர்கள் நடந்தே செல்வதாகவும், கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் பள்ளிகளுக்கு 48% மாணவர்கள் நடந்தே செல்வதாகவும், கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் என்ஏஎஸ் எனப்படும் National Achievement Survey ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். 720 மாவட்டங்களில் இருந்து கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் 34 லட்சம் பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். முன்னதாக 2017ஆம் ஆண்டு இந்த என்ஏஎஸ் ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. 

22 மொழிகளில் ஆய்வு

ஆய்வுக்காக மாணவர் கேள்வித்தாள், ஆசிரியர் கேள்வித்தாள் மற்றும் பள்ளி கேள்வித்தாள் ஆகியவை உருவாக்கப்பட்டு, 22 பிராந்திய மொழிகளில் என்சிஇஆர்டியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த ஆய்வு சிபிஎஸ்இயால் மேற்பார்வை செய்யப்பட்டது. 

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. 3 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. 

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. 

ஆய்வு சொல்வது என்ன?

இந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

''* நாடு முழுவதும் குறைந்தபட்சம் 48 சதவீத மாணவர்கள் நடந்துதான் பள்ளிக்குச் செல்கின்றனர். 

* 18 சதவீதம் பேர் மிதிவண்டி மூலம் பள்ளிக்குச் செல்கின்றனர்.

* 9 சதவீத மாணவர்கள் பள்ளி போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். 

3 சதவீத மாணவர்களுக்கு 4 சக்கர வாகனங்கள் 

* 8 சதவீத மாணவர்கள் சொந்த இரு சக்கர வாகனங்கள் மூலம் பள்ளிக்குச் செல்கின்றனர். வெறும் 3 சதவீத மாணவர்கள் மட்டுமே கார் உள்ளிட்ட சொந்த நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். 

* 87 சதவீதப் பள்ளிகளில், கற்றலில் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்  எவ்வாறு வழிகாட்டலை வழங்கலாம் என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன.

* எனினும் கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

* 51 சதவீத மாணவர்களின் வீட்டில் மட்டுமே பெற்றோருக்கான புத்தகங்கள் அல்லது இதழ்கள் இருக்கின்றன. 

* 89 சதவீத மாணவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்''.  

இவ்வாறு ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget