மேலும் அறிய

MKU: 'பதவியே வேண்டாம்'- மதுரை காமராசர் பல்கலைக்கழக முதல்வரின் கடிதத்தால் பரபரப்பு- பின்னணி இதுதான்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறுப்பு முதல்வர் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க கோரி கன்வீனருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி முதுகலை மாணவர்கள் சேர்க்கை குறைவு தொடர்பாக  பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுப்பு முதல்வர் தனக்கு பதவி வேண்டாம் என கூறி கன்வீனியருக்கு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காமராசர் பல்கலைக்கழக கல்லூரி
 
மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் காமராசர் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் முதல்வருக்கான காலியிடம் நிரப்பப்படாத நிலையில் பொறுப்பு முதல்வராக சமூக அறிவியல் துறையின் தலைவர் புவனேஸ்வரன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொறுப்பு முதல்வர் புவனேஸ்வரன் தன்னை, பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சமூகவியல் துறைக்கு பணியாற்றச் செய்யுமாறு, பல்கலைக்கழக கன்வீனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனுடன் பேராசிரியர்கள் இடையேயான வாக்குவாதம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளையும் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்வீனியருக்கு கடிதம்
 
அந்த கடிதத்தில், ‘’மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியின் பொறுப்பு முதல்வரான என்னுடைய தலைமையில் இன்று காலை முதல்வர் அறையில் துணைத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது, அப்போது முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளை 5ஆம் தேதி திறப்பது தொடர்பாக விவாதம் நடந்தபோது சில துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கை 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்தது. அந்த குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள துறைகளையும் திறக்கலாமா என பி.காம் சி.ஏ துறை தலைவர் ராணி கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் மோகன், பேராசிரியர் ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதனையடுத்து மற்ற துணைத்தலைவர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தபோது, பேராசிரியர் மோகன் பேராசிரியர் ராணியை வெளியே போ என கூறியதோடு ஒருமையிலும் பேசினார்.
 
இதனால், பேராசிரியர் மோகனிடன் நீங்கள் ஒருவரே இந்த கல்லூரி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என கூறியதோடு இந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்ற முடியாது, என்று கூறிவிட்டு அதை விட்டு வெளியே வந்துவிட்டேன். எனவே கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தன்னை விடுவித்து என்னுடைய சமூகஅறிவியல் துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும்’’ என பல்கலைக்கழக கன்வீனருக்கு எழுதிய கடிதத்தில் பொறுப்பு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 
என்னுடைய துறைக்கே மாற்றுங்கள்
 
’’இந்த கல்லூரியில் இவர் போன்ற பேராசிரியர் மத்தியில் என்னால் பணியாற்ற முடியாது. என்னை கல்லூரி பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து விடுவித்து மீண்டும் நான் பணியாற்றிய சமூகஅறிவியல் துறைக்கு மாற்றுங்கள்’’ என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வாக்குவாதம் நடைபெற்றதற்கான சிசிடிவி காட்சிகளை ஆதாரத்தோடு சமர்ப்பித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது.
 
ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகளும் மோதல்களும் இருந்து வரும் நிலையில் பொறுப்பு முதல்வரும் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க கோரி கன்வீனருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Embed widget