மேலும் அறிய

பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்

தனது குழந்தை வெற்றி பெற வேண்டும் என்பது அப்பா, அம்மா இரண்டு பேரின் ஆசை, ஆனால் ஒரு குழந்தை மட்டுமல்ல தன்னிடம் படிக்கும் அனைத்து குழந்தைகளும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான போட்டி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் தேசிய அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 7-வது சர்வதே எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை இன்று (சனிக்கிழமை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது.  2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவியர்கள் பங்கேற்ற 7-வது  தேசிய அபாகஸ் அடிப்படையிலான  எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது.

இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து பேசிய அவர், உலக முழுவதும் சுற்றியுள்ளேன், பல நாடுகளில் பார்த்துள்ளேன். அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அந்த விஷயங்களையெல்லாம் இங்கு கொண்டு வந்து சேர்த்து விட முடியாத என எண்ணிப்பார்த்துள்ளேன். 

மாணவர்களுக்கு தனித்திறமையும் முக்கியம்

வெறும் பாடப்புத்தகத்தை மட்டுமல்ல தனித்திறமை வளர்க்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். கணக்கு பாடம் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்காமல் விளையாட்டாக இனிய நிகழ்வாக, எளிய முறையாக செய்ய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் அபாகஸ், குழந்தைகளை தனது இடுப்பில் வைத்திருப்பார்கள், அந்த குழந்தை அழுதால் எதற்காக அழுகிறது என தாய்க்கு தான் தெரியும், பசியால் அழுகிறதா.? வயிற்று வலியால் அழுகிறதா என தெரியும். அதே போல தனது குழந்தை வெற்றி பெற வேண்டும் என்பது அப்பா, அம்மா இரண்டு பேரின் ஆசை, ஆனால் ஒரு குழந்தை மட்டுமல்ல தன்னிடம் படிக்கும் அனைத்து குழந்தைகளும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள். 

குழந்தைகளுக்கு முதல் டீச்சர் பெற்றோர்

அதே நேரம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தொடங்குவது வீடு, குழந்தைகள் காலையில் எழுப்பும் போது அன்பாக, பாசமாக எழுப்ப வேண்டும் ஆனால் நம் வீட்டில் எருமை மாடு எழுந்திரு என திட்டியே எழுப்புவார்கள். ஆனால் வெளிநாடுகளில் குழந்தைகளோடு உரையாடுவது கூட மரியாதையாக இருக்கும். எனவே வீட்டில் இருந்து தான் இனிமையான சூழல் உருவாகிறது. குழந்தைகளுக்கு அப்பா அம்மா தான் முதல் டீச்சர்
குழந்தைகளுக்கு உண்மையை பேச சொல்லி கொடுங்கள். வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றால் டீச்சரிடம் உண்மையை பேச சொல்லிக்கொடுங்கள். லீவ் எடுத்தால் உண்மையை சொல்ல சொல்லுங்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். 


பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்

தமிழக மாணவர்கள் உலகரங்கில் வளர்ச்சி

இதனை தொடர்ந்து பேசிய இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்கள் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் அதுதான் எங்களது முதல் நோக்கம். அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள்  எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்.

அதன் ஒரு வழி தான் இந்த சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம் இதை மேலும் மேலும் நடத்த மாநில அரசு துணை நின்றால் நிச்சயமாக நாம், நமது இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்வோம் என தெரிவித்தார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!
மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget