மேலும் அறிய
முதல் கிராமம், முதல் வாக்குறுதி நிறைவேற்றம்... மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., செய்த நெகிழ்ச்சி சம்பவம் !
5 -ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன் தனக்கு கல்வி பயில பொருளாதார வசதி இல்லை என்றும் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல் கிராமம் முதல் வாக்குறுதி
Source : whatsapp
கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்பு அக்கிராமத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.
தமிழ்நாடு தேர்தல் வெற்றி
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது தமிழக வெற்றிக் கழகம். 108 தொகுதிகளில் மட்டுமே தவெக வெற்றி பெற்றிருந்தாலும் அக்கட்சியினர் தனிப்பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் காங்கிரஸ் கூட்டணி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்திருந்தார்.
அமைச்சர்கள் யார்? யார்?
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்கள் பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்கு பிறகே அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டது. இன்னும் பல துறைகளுக்கான அமைச்சர்கள் யார்? யார்? என்று அறிவிக்கப்படாமலே உள்ளது. கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரசிற்கு 2 அமைச்சர்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ள சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக-வினரும் அமைச்சரவையில் இடம்பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பொதுத் தொகுதியான மேலூர் சட்ட மன்ற தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றது வியப்பாக பார்க்கப்படுகிறது. சாதிய பாகுபாடு அதிகளவு உள்ளதாக கருதப்பட்டு வருகிறது. மேலவளவு பகுதியில் 6 நபர்கள் சாதிய பாகுபாடிற்காக படுகொலை செய்யப்பட்டதும் இந்த தொகுதி தான். இந்நிலையில் பட்டியலின வேட்பாளர் விஸ்வநாதன் அவர்கள் வெற்றி பெற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தேர்தல் சமயத்தில் வாக்குறுதி
இந்த சூழலில் மேலூர் அருகே கொடுக்கம்பட்டி அருகில் உள்ள தச்சம்பட்டி கிராமத்தில் தேர்தல் பரப்புரையின் போது மேலூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாத பெருமாள், அவர்களிடம் சுருதி என்ற 5 -ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன் தனக்கு கல்வி பயில பொருளாதார வசதி இல்லை என்றும் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல் செயல்பாடு
அதன்படி 18/05/2026 நேற்று வெற்றிப் பெற்றப்பின் முதல் கிராமமாக அக்கிராமத்திற்கு சென்று அந்த சிறுவனை சந்தித்து கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் அச்சிறுவனின் தாயார் வங்கிக் கணக்கில் கல்விக்காக மாதம் 3000 மீதம் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக உத்திரவாதமும் அளித்தார். மேலும் அக்கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்பு அக்கிராமத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் மேலூர் பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















