மேலும் அறிய

கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

என்னும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் கேஷ் பொய்யாமொழி கூறினார்.

 


கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகப் பணிகள் குறித்தும், அரசு திட்டங்களை எவ்வாறு மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்பது குறித்தும் கல்வி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அதே வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் கல்வி தொடர்பான அரசு திட்டங்கள் குறித்து தெரிவித்து நல்ல முறையில் மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். 

இதை அடுத்து அவர் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறை மிகப்பெரிய துறை. இந்த துறை மூலம் 231  தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பள்ளி, நூலகத்துறை, கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆகியவற்றில் 74 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத இன்டர்நேஷனல் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி முறைகளை தெரிந்து கொள்வதோடு தமிழக அரசு சார்பில் கல்வித்துறையில் எந்தெந்த விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அவர்கள் நேரில் வந்து பார்ப்பதற்கு அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

 


கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

34 தொகுதிகளில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு 35 தொகுதியாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் கனவை நினைவாக்கும் விதமாக இத்துறையில் உள்ள அனைத்து அலுவலர்களும் தங்கள் முழு உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். என்னும் எழுத்தும் திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் அடிப்படை கல்வியை கற்று முழுமையான கல்வி அறிவை பெற்று அவர்களை திறமை மிக்க மாணவர்களாக உருவாக்க பணி செய்து வருகிறோம். ஏசியில் உட்கார்ந்து கொண்டு ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதை விட நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையின் அடிப்படையில் இந்த ஆய்வு பணியை செய்து வருகிறோம். 

 

 

 


கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பல்வேறு துறை சார்பில் ஆய்வுகள் செய்யப்பட்டாலும் அனைத்து தொகுதிகளிலும் உண்மையான ஆய்வு மேற்கொண்ட பின்னர் அது தொடர்பான அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளோம் கருத்து வேறுபாடு இன்றி ஆய்வு செய்யும் தொகுதிக்கு செல்லும்போது அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உடன் அழைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறோம். இந்த துறை அரசியல் பார்க்கக்கூடாத ஒரு துறை. எதிர்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு பள்ளியில் நுழைவுத் தேர்வு என்பது தவறான ஒரு புரிதலாகும். இது தொடர்பான உரிய செய்தி குறிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார். இந்த ஆய்வில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
Embed widget