மேலும் அறிய

கரூர்: அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கரூர் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளில், மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கரூர்: அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

படித்த இளைஞர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவர்களின் படிப்பு, திறமைக்கேற்ப வேலை கிடைப்பதில்லை. படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையை தான் பலர் பார்த்து வருகின்றனர். படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

எனவே படிக்கும் போதே மாணவ, மாணவிகளுக்கு படிப்புடன் கூடிய தொழிற்கல்வியும் சேர்த்து அளித்தால், அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி அளித்து வந்தது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் கல்வி அளிக்கப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், மல்டி ஸ்கில், புட் ப்ராசஸ், பியூட்டிசன் வொர்க் ஆகிய தொழிற்கல்வி படிப்புகள் அந்தந்த பள்ளிகளில் 2 பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பள்ளிகளில் தினமும் ஒரு பாட வேளையில் இந்த தொழிற்கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்காக பள்ளிகளில் ஆய்வகமும் தொடங்கப்பட்டது.


கரூர்: அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

மேலும் 9, 10 வகுப்புகளை தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இந்த தொழிற்கல்வி படிப்பு விரிவாக்கம் செய்ய பள்ளிகளில் விவரம் சேகரிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ என்று தெரியவில்லை இந்த கல்வியாண்டிலேயே 4 அரசு பள்ளிகளிலும் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படிப்புடன் கூடிய தொழிற்கல்வி என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற பழமொழிக்கேற்ப படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட தொழில்கல்வி படிப்பு திட்டத்தை, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget