மேலும் அறிய

School Dropout: 10-ஆம் வகுப்பில் இடைநின்ற 30 லட்சம் இந்திய மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி அறிக்கை- தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள், 10ஆம் வகுப்புக்குப் பிறகு தங்களின் படிப்பைத் தொடரவில்லை.

2021 – 22ஆம் கல்வி ஆண்டில் நாட்டில் 10ஆம் வகுப்புக்குப் பிறகு இடைநின்ற மாணவர்களின் சதவீதம் 20.6 ஆக உள்ளது. மக்களவையில் இந்தத் தகவலை மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.

இதன்படி, மத்தியக் கல்வி அமைச்சகம் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளது அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்திய நாட்டில் 10ஆம் வகுப்புக்குப் பிறகு இடைநின்ற மாணவர்களின் சதவீதம் 20.6 ஆக உள்ளது. 2021 – 22ஆம் கல்வி ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஒடிசா, அதிகபட்ச இடைநிற்கும் மாணவர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிக்குப் பாதி மாணவர்கள் உயர் படிப்பைத் தொடர்வதில்லை.  அதாவது ஒடிசாவில் 49.9 சதவீத இடை நிற்றல் பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக பிஹாரில், 42.1 சதவீத மாணவர்கள் 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள், 10ஆம் வகுப்புக்குப் பிறகு தங்களின் படிப்பைத் தொடரவில்லை. அதாவது 2022ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 1,89,90,809 மாணவர்கள் எழுதினர். இதில், 29,56,138 மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்லவில்லை.

இடைநிற்றலுக்கு என்ன காரணம்?

மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தோற்க ஏராளமான காரணிகள் பங்கு வகிக்கின்றன. பள்ளிகளுக்குச் சரியாகச் செல்லாமல் இருப்பது, பள்ளி விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், படிப்பதில் போதுய ஆர்வம் இல்லாமல் இருப்பது, கேள்வித் தாள்கள் கடினமாக இருப்பது, தரமான ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, பெற்றோர்கள், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் இதில் அடக்கம். கூடுதலாக, கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், சம்பந்தப்பட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றன.

இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலங்கானாவில் அதிகம்

அத்துடன் மக்களவையில் மாநிலங்கள் வாரியாக 2018- 19 முதல் 2021- 22 ஆகிய 4 ஆண்டுகளுக்கான 10ஆம் வகுப்புக்குப் பிறகான இடைநிற்றல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், ஒடிசா, பிஹார் ஆகிய மாநிலங்களோடு, மேகாலயா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அசாம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவிலான மாணவர்களின் இடைநிற்றம் விகிதம் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடைநிற்றல் வீதம் பதிவாகி உள்ளது.

முன்னேறி வரும் அஸாம்

இதில் அஸாம் மாநிலத்தில் இடைநிற்றல் வீதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. அங்கு 44 சதவீதமாக இருந்த மாணவர் இடைநிற்றல் 28.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஒடிசாவில், 12.8 சதவீதமாக இருந்த மாணவர் இடைநிற்றல், 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget