மேலும் அறிய

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை..!

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்து காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு வலிமையான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தேர்தல் வாக்குறுதியும், 14 ஆண்டு கால துயரமும்

2021 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 181-வது வாக்குறுதியாக, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி முதல்வரின் அறிவிப்புக்காக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

"கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, 14 ஆண்டுகள் கல்விப் பணியில் அனுபவம் பெற்றிருந்தும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு 5000 ஊதியத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது மாதம் ரூ.12,500 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதை நம்பி வாழும் 12,000 ஆசிரியர்களின் குடும்பங்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றன. 

வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகள்

பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் பல அடிப்படை உரிமைகளை இழந்து வருகின்றனர். இவர்களுக்கு:

* இதுவரை மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

* பண்டிகை போனஸ் வழங்கப்படவில்லை.

* அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் EPF (வருங்கால வைப்பு நிதி) மற்றும் ESI (மருத்துவ காப்பீடு) உள்ளிட்ட எந்தவிதமான அரசு சலுகைகளும் வழங்கப்படவில்லை.

மிகக் குறைந்த வருமானத்தில், வாழ்வாதாரப் பாதுகாப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்களின் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மனதளவில் அவர்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரம்

தற்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் பாடவாரியான எண்ணிக்கை பின்வருமாறு:

உடற்கல்வி - 3,700 

ஓவியம் - 3,700 

கணினி அறிவியல் - 2,000 

தையல் - 1,700

இசை - 300 

தோட்டக்கலை - 20

கட்டிடக்கலை - 60 

வாழ்க்கை கல்வி - 200

மொத்தம் - 12,000 

பணி நிரந்தரம் ஏன் அவசியம்?

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்போது, அவர்கள் சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

* சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது Pay Band Level 10-ன் படி ரூ.20,600 என்ற அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பணி நிரந்தரம் செய்யப்பட்டால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியமாக கிட்டத்தட்ட ரூ.30,000 வரை ஊதியம் கிடைக்கும். அத்துடன் அனைத்து அரசு சலுகைகளும் கிடைக்கும்.

"முந்தைய அரசுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பல ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்த அரசாணைகளும், முன் உதாரணங்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" எனவும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளுக்கும் கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்பது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்திய கோரிக்கைதான். எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் தாக்கல் செய்து பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மேலும், இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் பணிப்பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., கொ.ம.தே.க., த.வா.க., ம.ம.க. ஆகிய கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி, பா.ஜ.க., பா.ம.க., புரட்சி பாரதம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் செந்தில்குமார் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல லட்சம் மாணவர்களின் கல்விக்காகவும், 14 ஆண்டு கல்விப்பணி அனுபவத்திற்காகவும், 12,000 ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் முதல்வர் ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
Embed widget