![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தவறான கல்விக் கொள்கையால் வேலைக்காகக் கையேந்தும் நிலையில் உள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி வேதனை
தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன் நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும்.
![தவறான கல்விக் கொள்கையால் வேலைக்காகக் கையேந்தும் நிலையில் உள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி வேதனை Governor RN Ravi said that due to the wrong education policy, the educated youth are in a position to get jobs தவறான கல்விக் கொள்கையால் வேலைக்காகக் கையேந்தும் நிலையில் உள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/2493379a40d75a46fd2f887ed4c370321716797513426188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாடு உதகை ராஜ்பவன் மாளிகையில் துவங்கி உள்ளது. இந்த மாநாட்டினை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்த மாநாட்டில் உயர்கல்வியில் ஆராய்ச்சியின் சிறப்பு அம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகள் குறித்த விரிவாக விவாதித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மாநாட்டில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 48 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி பேசும் போது, “2021ம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்றபோது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன.
அவற்றின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்வி கொள்கைதான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், நாம் பின் தங்கி உள்ளோம்.
சுதந்திரத்துக்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத் தில் இருந்த நாம் 11ம் இடத்துக்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3 இடத்திற்கு முன்னேற உள்ளோம். தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர்.
திருக்குறளை மேற்கோள் காட்டிய ஆளுநர்
கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன் நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்க்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும்.
திருவள்ளுவர் கற்பித்தல் குறித்து கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது.
பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)