மேலும் அறிய

"ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக அரசு: கருத்து கூறினால் ஆசிரியை சஸ்பெண்டா?" ஈபிஎஸ் கண்டனம்

திமுக அரசு ஆசிரியப்‌ பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஆசிரியப்‌ பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''மாதா, பிதா, குரு, தெய்வம்‌ என்ற வரிசையில்‌ பெற்றோருக்குப்‌ பிறகு ஆசிரியப்‌ பெருமக்களை குருவாக நிறுத்தி, பிறகுதான்‌ தெய்வத்தை நமது முன்னோர்கள்‌ வரிசைப்படுத்தினார்கள்‌.

அதிமுக ஆட்சியில் ஆசிரியர்களுக்கும்‌, கல்வி வளர்ச்சிக்கும்‌ முக்கியத்துவம்‌

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌, எதிர்கால சந்ததியினரை நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌, கல்வி வளர்ச்சிக்கும்‌ முக்கியத்துவம்‌ வழங்கி பல்வேறு நலத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டன. ஆனால்‌, இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே ஆசிரியப்‌ பெருமக்களுக்கு அறிவித்த எந்தத்‌ தேர்தல் வாக்குறுதியையும்‌ நிறைவேற்றவில்லை.

இந்நிலையில்‌, ஆசிரியை உமா மகேஸ்வரி என்பவர்‌ கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கட்டுரைகளை சமூக வலைதளங்களில்‌ வெளியிட்டு வந்துள்ளார்‌. அவற்றில்‌ஊடகம்‌ சார்ந்த ஒரு வலைதளத்தில்‌ கல்வித்‌ துறையில்‌ பதினைந்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்‌ காலியாக இருப்பதாகவும்‌ 1200-க்கும்‌ மேற்பட்ட பள்ளிகள்‌ ஓராசிரியர்‌ பள்ளிகளாக இருப்பதாகவும்‌; இந்த ஆண்டு பட்ஜெட்டில்‌ கூட 3,200 கோடி ரூபாய்‌ அடிப்படை கட்டமைப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்‌, ஆனால்‌, ஆசிரியர் பணி நியமனம்‌ குறித்த அறிவிப்பு இருந்தால்‌ நன்றாக இருக்கும்‌ என்றும்‌, இல்லம்‌ தோறும்‌ கல்வி திட்டத்திற்கு பலநூறு கோடி ரூபாய்‌ வீணாக செலவழிக்கப்படுவதாகவும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

ஆசிரியை உமா மகேஸ்வரி தற்காலிக பணி நீக்கம்‌

எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால்‌ கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும்‌ என்று தெரிவித்திருந்த நிலையில்‌, அவரை திமுக அரசு தற்காலிக பணி நீக்கம்‌ செய்துள்ளதாக செய்திகள்‌தெரிய வருகின்றன.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்‌

கெடுப்பா ரிலானுங்‌ கெடும்‌”'

என்ற குறளுக்கேற்ப, பணியில்‌ இருந்த ஆசிரியை உமா மகேஸ்வரி‌, தமிழகக்‌ கல்விப்‌ பணி சிறக்க வேண்டும்‌ என்ற உன்னத நோக்கத்தில்‌ தனது கருத்தைக்‌ கூறினால்‌, அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அந்த ஆசிரியரை இடை நீக்கம்‌ செய்ததை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌. ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு உடனடியாக மீண்டும்‌ பணி வழங்க வேண்டும்‌ என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்‌''.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: அரசை விமர்சிப்பது குற்றமா? அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN LIVE Score: 150 ரன்களை கடந்த இந்தியா.. களத்தில் பாண்டியா! அதிரடி இருக்கு!
IND vs BAN LIVE Score: 150 ரன்களை கடந்த இந்தியா.. களத்தில் பாண்டியா! அதிரடி இருக்கு!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN LIVE Score: 150 ரன்களை கடந்த இந்தியா.. களத்தில் பாண்டியா! அதிரடி இருக்கு!
IND vs BAN LIVE Score: 150 ரன்களை கடந்த இந்தியா.. களத்தில் பாண்டியா! அதிரடி இருக்கு!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget