மேலும் அறிய

தருமபுரி அருகே முதல் நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர். 

தருமபுரி அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்பு கொடுத்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள்.


தருமபுரி அருகே முதல் நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை என்பது படிப்படியாக சரிந்து வந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்த குழந்தைகளை தனியார் பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்து வந்தனர். இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் மாணவர்களுக்கு அரசு பள்ளியின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்காக பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுமார் பள்ளி வளாகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் கண்களை கவரும் வகையில் பள்ளி வகுப்பறை மற்றும் சுற்று சுவர்களில் வன விலங்கு வகைகள், மற்றும் வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சி வகைகள், பறவைகள், இயற்கை சார்ந்த ஓவியங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய தலைவர்கள், சோட்டா பீம், டோரா புஜ்ஜி போன்ற கார்ட்டூன் வகைகள் குழந்தைகளை கவரும் வண்ணங்களை கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர். 


இந்நிலையில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது‌. இதில் முதல் வகுப்பில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் நாள் பள்ளி திறக்கப்பட்டது. இதில் முதல் வகுப்பில் சேர்ந்த 20 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

தொடர்ந்து பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவர்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, வகுப்பறையில் அமர வைத்தனர். இந்தாண்டு இதுவரை முதல் வகுப்பில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்   மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget