மேலும் அறிய

அரசு மருத்துவர்‌ நியமனத்‌தில்‌ ஊழல்‌‌; மருத்துவ தகுதித்‌ தேர்வை அரசு தேர்வாணையத்தின்‌ மூலமே நடத்தக் கோரிக்கை!

தனியார்‌ நிறுவனத்தின்‌ மூலம்‌ சிறப்புத்தகுதி தேர்வு என்னும் நடத்துவது பெரும்‌ ஊழல்‌ முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்‌ என்பதால்‌ அம்முடிவைக்‌ கைவிடுக- சீமான்.

அரசு மருத்துவர்‌ நியமனத்‌ தேர்வில்‌ ஊழல்‌ புகார்‌ வெளிவந்த நிலையில், மருத்துவர்‌ தகுதித்‌ தேர்வினை அரசு மருத்துவப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமே நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:

‘’தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு மருத்துவமனைகளில்‌ 2026ஆம்‌ ஆண்டுவரை காலியாக உள்ள மருத்துவர்‌ பணியிடங்களுக்கு எதிர்வரும்‌ 05.01.2025 அன்று நடைபெறும்‌ மருத்துவர்‌ நியமனத்‌ தேர்வானது, அரசு மருத்துவப்‌ பணியாளர்‌தேர்வாணையத்தின்‌ மூலம்‌ நடத்தப்படாமல்‌, டாடா கன்சல்டன்சி என்ற தனியார்‌ நிறுவனம்‌ நடத்தும்‌ சிறப்புத்தேர்வின்‌ மூலம்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌ என்று மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா.சுப்ரமணியன்‌‌ அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின்‌ சுகாதாரத் துறையில்‌ அரசு மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌, மருந்தாளுநர்கள்‌, ஆய்வகத்‌ தொழில்நுட்ப வல்லுநர்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ உள்ளிட்ட 200 வகைப்பட்ட மருத்துவப்‌ பணியாளர்கள்‌நியமனத்தில்‌ நடைபெற்று வந்த ஊழல்‌ மற்றும்‌ முறைகேடுகளைக்‌ களையும்பொருட்டு, தமிழ்நாடு அரசு கடந்த 2012ஆம்‌ ஆண்டு மருத்துவப்‌ பணியாளர்கள் தேர்வு வாரியத்தை (எம்ஆர்பி - Medical Services Recruitment Board) தொடங்கியது. 2012 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2018 ஆம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில்‌ 4 முறை தேர்வுகள்‌ நடத்தி 13 ஆயிரம்‌ மருத்துவர்கள்‌ எவ்வித குளறுபடிகளின்றி மருத்துவப்‌ பணியாளர்கள்‌ தேர்வு வாரியத்தால்‌ நியமனம்‌ செய்யப்பட்டனர்‌.

மருத்துவர்கள்‌ நியமனத்திற்கான தேர்வுகள்‌ நடைபெறும்‌

இந்நிலையில்‌ திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில்‌ வெறும்‌ 1061 மருத்துவர்கள்‌ மட்டுமே நியமனம்‌ செய்யப்பட்டனர்‌. அரசு மருத்துவமனைகளில்‌ உள்ள காலிப் பணியிடங்களை திமுக அரசு நிரப்பாதது ஏன்‌? என்று பலமுறை நான்‌ கண்டனம்‌ தெரிவித்த பிறகு, வரும்‌ சனவரி மாதம்‌ தனியார்‌ நிறுவனம்‌ மூலம்‌ மருத்துவர்கள்‌ நியமனத்திற்கான தேர்வுகள்‌ நடைபெறும்‌ என அமைச்சர்‌ மா.சுப்ரமணியன்‌ அறிவித்தார்‌.

அதோடு, பெரிய அளவில்‌ மருத்துவர்கள்‌ தேர்வினை தனியார்‌ நிறுவனத்தின்‌ மூலமே நடத்த முடியும்‌ என்றும்‌ திராவிட மாடல்‌ அரசின்‌ அமைச்சரே கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால்‌ திமுக அரசின்‌ நிர்வாகத் திறமை இன்மையை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா?

பெரிய தேர்வினை தனியார்‌ நிறுவனத்தால்‌ மட்டுமே நடத்த முடியுமா?

கடந்த காலங்களில்‌ பல்லாயிரக்கணக்கான மருத்துவர்‌ மற்றும்‌ மருத்துவப்‌பணியாளர்‌ பணியிடங்களை நிரப்பிய தமிழ்நாடு அரசின்‌ மருத்துவப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ வெறும்‌ 2553 மருத்துவர்கள்‌ நியமனத்திற்கான தேர்வினை நடத்த முடியாதா? 24 ஆயிரம்‌ பேர்‌ விண்ணப்பித்துள்ளதால்‌ பெரிய தேர்வினை தனியார்‌ நிறுவனத்தால்‌ மட்டுமே நடத்த முடியும்‌ என்று அமைச்சர் கூறுகிறார்‌. ஆனால்‌, இதே திமுக ஆட்சியில்‌ அரசு மருத்துவப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்திய தேர்வு மூலம்‌ கடந்த ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 25 ஆயிரம்‌ பேர்‌ விண்ணப்பித்து 1061 மருத்துவர்கள்‌, தேர்ந்தெடுக்கப்பட்டனரே?

தற்போது அதைவிடக் குறைவான தேர்வர்கள்‌ பங்கேற்கும்‌ தேர்வினை அரசு மருத்துவப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்த முடியாதா? மருத்துவப்‌பணியாளர்கள்‌ நியமனத்தில்‌ நடைபெற்ற ஊழல்‌ முறைகேடுகள்‌ காரணமாகவே அரசு மருத்துவப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ இந்தியாவிலேயே முதல்முறையாக அன்றைய முதல்வர்‌ அம்மையார்‌ ஜெயலலிதாவால்‌ தோற்றுவிக்கப்பட்டது.

லட்சக்கணக்கில்‌ லஞ்சம்‌ பெற்று மிகப்பெரிய முறைகேடுகள்‌?

தற்போது மீண்டும்‌ தனியார்‌ நிறுவனம்‌ நடத்தும்‌ சிறப்புத்தகுதி தேர்வு மூலமே மருத்துவர்கள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌ என்ற அமைச்சர்‌ மா.சுப்ரமணியத்தின் அறிவிப்பு அரசு மருத்துவர்கள்‌ பணி நியமனத்தில்‌ லட்சக்கணக்கில்‌ இலஞ்சம்‌ பெற்று மிகப்பெரிய முறைகேடுகள்‌ நடைபெறுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, தனியார்‌ நிறுவனத்தின்‌ மூலம்‌ சிறப்புத்தகுதி தேர்வு என்னும் நடத்துவது பெரும்‌ ஊழல்‌ முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்‌ என்பதால்‌ அம்முடிவைக்‌ கைவிட்டு, வழக்கம்போல அரசு மருத்துவப் பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமே மருத்துவர்‌ தகுதித்தேர்வினை நடத்தி காலியாகவுள்ள அரசு மருத்துவர்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்பட வேண்டுமென வலியறுத்துகிறேன்‌’’.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Gaza Hamas Vs Israel: “ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
“ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
Delhi Bomb Blast: “டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
“டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Gaza Hamas Vs Israel: “ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
“ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
Delhi Bomb Blast: “டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
“டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கொட்டித் தீர்க்கும்! புதுச்சேரி, காரைக்காலில் என்ன நிலை?
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கொட்டித் தீர்க்கும்! புதுச்சேரி, காரைக்காலில் என்ன நிலை?
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
Thalaivar 173: ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு உண்மையான காரணம் இதுதானா?
Thalaivar 173: ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு உண்மையான காரணம் இதுதானா?
2026 தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை போட்டி? அமைச்சரவையில் இடம்பிடிப்பாரா? - அவர் சொல்வது என்ன !
2026 தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை போட்டி? அமைச்சரவையில் இடம்பிடிப்பாரா? - அவர் சொல்வது என்ன !
Embed widget