மேலும் அறிய

Common Syllabus: பல்கலை., கல்லூரிகளில் பொது பாடத்திட்டம்: உயர் கல்வியில் ஜனநாயக மறுப்பு ஏன்?- மக்கள் கல்வி கூட்டியக்கம் கேள்வி

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, உயர் கல்வியில் ஜனநாயகத்தை மறுப்பது ஏன் என்று மக்கள் கல்வி கூட்டியக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, உயர் கல்வியில் ஜனநாயகத்தை மறுப்பது ஏன் என்று மக்கள் கல்வி கூட்டியக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து மக்கள் கல்வி கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளதாவது:

''தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வி மன்றம் (டான்ஸ்கி) அறிவுறுத்தியுள்ளது. இது கல்விப் பரப்பில் ஜனநாயகத்தை முடக்கும் அடக்குமுறையாகும். தமிழ்நாட்டின் தனிக் கல்விக்கொள்கை உருவாகிவரும் வேளையில் இப்படி அதிரடித் தாக்குதலாக அரசு "ஒரே நாடு ஒரே பாடத்திட்டத்தை" திணிப்பது கண்டிக்கத்தக்கது. எந்த வித நெருக்கடியும் ஏற்படாத நிலையில், இப்படி ஒரு திட்டத்தை அரசு கொண்டு வருவதன் உள் நோக்கம் கேள்விக்குறியதாகும். ஒரு புறம் தேசியக் கல்விக்கொள்கையை எதிர்க்கின்றோம் என அறிவிக்கும் அரசு, அதற்கு நேர் மாறாக இம்மாதிரி திட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கம் என்ன?

உலகில் கல்வித்துறையில் புதுப் புது துறைகள் உருவாகி வருகின்றன. அவற்றிற்கு ஏற்ற பாடத்திட்டங்களை பல்கலைக் கழகங்கள் தங்களுடைய பிரத்யேக கல்வித்திட்டக் குழுக்கள் மூலம் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு  உருவாக்கி, கல்விப்பேரவை, ஆட்சிக்குழு போன்ற பல அடுக்குகளில் விவாதித்து நடைமுறைக்குக் கொண்டுவருவகின்றன. பல்கலைக் கழக மானியக் குழுவே கூட பாடத்திட்டங்களின் வடிவமைப்பை மட்டுமே வழிகாட்டுதலாக முன்வைக்குமே தவிர, அதை அப்படியே கடைப்பிடிக்க வலியுறுத்துவதில்லை. 

 உயர்கல்வியை மிகவும் பாதிக்கும்

தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன. அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியே புதுமையான மற்றும் தரமான  பாடத்திட்டங்களை உருவாக்கி, முறையான பாடக்குழுக்களை அமைத்து  கல்விப் பேரவைகள் மூலம் அவை ஏற்கப்பட்டு கற்பிக்கப்படலாம் என்பதே ஆகும். தன்னாட்சி நிலை வழக்கத்திற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கான சுதந்திரத்தை முற்றிலும் முடக்கும் இந்த புதிய நடைமுறை, தன்னாட்சிக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கல்வி சுதந்திரத்தை இழக்க வைக்கும். ஒற்றைப் பாதை மூலம் ஆட்சியில் உள்ள அரசு எந்தப் பாடத்திட்டத்தையும் திணிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மறுபுறம் பாடதிட்ட உருவாக்கத்தில் தன்னாட்சி மறுப்பு. இப்படி குழப்ப நிலையை அரசு ஏற்படுத்துவது தமிழகத்தில் உயர்கல்வியை மிகவும் பாதிக்கும்.

யாருக்கான சமரசம்?

பலகலைக் கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் உருவாக்கும் பாடத்திட்டங்களில் குறைகள் இருக்குமானால், அவை குறித்து புகார்கள் இருக்குமானால், அவை பற்றிய ஒரு ஆய்வு செய்து அவற்றை எவ்வாறு போக்குவது என்பது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் அரசு உரையாடல்களை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து இம்மாதிரி திட்டத்தை திணிப்பது தமிழகத்தின் ஒட்டு மொத்த உயர்கல்வித் தரத்தையும் உறுதியாகப் பாதிக்கும். இதில் 25 சதவிகித பாடங்களை அந்தந்தக் கல்வி நிலையங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பது யாருக்கான சமரசம்? பன்மைத்துவத்தை மறுக்கும் இந்தத் திட்டம்  ஆபத்தானது. தமிழ் நாட்டில் பிற்போக்கு அரசு ஆட்சி அமைக்குமானால் இதன் மூலம் அது எளிதாக தங்களுடைய பாடத்திடங்களைப் புகுத்திவிடும்.
  
வளர்ந்த நாடுகளில் ஒரே பாடத்திட்டம் என்ற நடைமுறை இல்லை. தமிழ், ஆங்கிலம் என மொழிப்பாடங்களிலும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை தமிழக அரசோ, தமிழக உயர்கல்வி மன்றமோ நடத்தவில்லை. 
தகுதியற்ற சில நூல்கள் பாடங்களாக வைக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவாதத்தை, ஆய்வை முறையாக மேற்கொண்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். பாடதிட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செழுமைப்படுத்தப்படவேண்டும், தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற நடைமுறையை இந்தத் திட்டம் செயல்படுத்தவே இயலாது. 

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் தயாரித்துக் கொடுப்பது சாத்தியமும் இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை. அப்படியெனில் பல்கலைக்கழகங்களில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட பாடத்திட்டக்குழுக்கள் கலைக்கப்படும் நிலைதான் உருவாகும். பாடத்திட்ட வடிவமைப்பில் பல வல்லுனர்களின் பங்கேற்பு மறுக்கப்படும். சிலர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழகத்தின் உயர்கல்விப்பாடதிட்டங்களை உருவாக்கும் சர்வாதிகார அமைப்பு உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டுகின்றோம். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை உருவாகும் வரை எந்த வித மாற்றங்களையும் கல்விதிட்டங்களில் திணிக்கவேண்டாம் என்றும் கோருகின்றோம்''.

இவ்வாறு மக்கள் கல்வி கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget