Naan Mudhalvan : நான் முதல்வன் திட்டம்.! மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவி- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Naan Mudhalvan Scheme: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவி திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் தங்களது இலக்குகளை அடையும் வகையில் பல்வேறு வழிகாட்டி உதவிகளை அரசு செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை கூட்டு முயற்சியுடன் 'நான் முதல்வன் திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம்
மேலும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள். குடும்ப உறுப்பினர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயர் கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், திருமணம் போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்கள். குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
அந்த வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 7வது தளத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் வழியாக ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். 11 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி உதவி
உயர் கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளின் காலிப்பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் என. அனைத்து தகவல்களும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும். மேலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 6381560194 (கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்) எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்





















