மேலும் அறிய

Class 1 Age: பெற்றோரின் கவனத்திற்கு! குழந்தைகளை 1ஆம் வகுப்பில் சேர்க்க கட்டுப்பாடு - மத்திய அரசு கூறும் வழிமுறைகள்! 

6 வயது ஆனால்தான் 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

6 வயது ஆனால்தான் 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

குழந்தைகளை 3 வயதில் மழலையர் வகுப்பில் சேர்க்கலாம் எனவும் 3 ஆண்டுகளுக்கு ப்ரீ- கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளை அவர்கள் படிக்க வேண்டும் என்றும் வழிமுறைகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 வயது முடிவடையும் முன்னரே மாணவர்களை 1ஆம் வகுப்பில் சேர அனுமதிக்கின்றன. உதாரணத்துக்கு அசாம், குஜராத் புதுச்சேரி, தெலங்கானா மற்றும் லடாக் உள்ளிட்ட மாநிலங்களில் 5 வயது ஆகி விட்டாலே ஒன்றாம் வகுப்பில் சேரலாம். ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியாணா, கோவா, ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சேர முடியும். 

சேர்க்கை விகிதத்தில் பாதிப்பு

இதுகுறித்து மத்திய அரசு கூறும்போது, ’’மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும்போது வயது வித்தியாசம் சிக்கலை ஏற்படுத்துகிறது. சிலர் குறைந்த வயது கொண்டவர்களாகவும் சில மாணவர்கள் அதிக வயது கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இது மாணவர் சேர்க்கை விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 

இதனால் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 6 வயது நிறைவடைந்த மாணவர்களையே 1ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கையை படிப்படியாக எடுக்க வேண்டும். மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

குழந்தைகளை 3 வயதில் மழலையர் வகுப்பில் சேர்க்கலாம். 3 ஆண்டுகளுக்கு ப்ரீ- கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளை அவர்கள் படிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை

கேந்திரியா வித்யாலயா, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி வாரியங்களில் 6 வயது ஆனால் மட்டுமே 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும் என்று மாணவர் சேர்க்கை விதிமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை 5+3+3+4 பள்ளி மாதிரியை அறிமுகம் செய்தது. இதன்படி, 3 முதல் 6 வயது வரை மழலையர் பள்ளியிலும் 6 முதல் 8 வயது வரை 1 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மத்திய அரசு அறிமுகம் செய்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்புவரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Metro Travel Card: மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Metro Travel Card: மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Embed widget