மேலும் அறிய

CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?

சிபிஎஸ்இ-யின் புதிய 3 மொழி பாடத்திட்டம்: R1, R2, R3 மொழிகளை தேர்ந்தெடுப்பது எப்படி? பாடப்புத்தகங்கள் குறித்த முழுமையான விளக்கம்!

தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய 3 மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை (Middle Stage) பயிலும் மாணவர்களுக்கான இந்த புதிய மொழித் திட்டம் எவ்வாறு செயல்படும்? R1, R2, R3 ஆகிய மொழிகளை எவ்வாறு தேர்வு செய்வது? பாடப்புத்தகங்கள் என்ன? என்பது குறித்த முழுமையான வழிகாட்டுதல்களைக் காணலாம்.

3 மொழி பாடத்திட்டம் என்றால் என்ன?


புதிய விதிகளின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தது மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், இந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக (Native Indian Languages) இருக்க வேண்டும். இந்த முறை 2026- 27ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பு, 2027ஆம் ஆண்டு 6, 7ஆம் வகுப்புகளுக்கும் என அறிமுகம் செய்யப்பட்டு, 2030ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு வரை மும்மொழி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

R1, R2, R3 மொழிகளின் விளக்கம்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் இந்த மூன்று மொழிகளும் R1, R2, R3 என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • R1 (முதல் மொழி / பயிற்று மொழி):
    இது பெரும்பாலும் மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் (பிராந்திய) மொழியாக இருக்கும். பள்ளிகளில் மற்ற பாடங்களைக் கற்பதற்கான பயிற்று மொழியாகவும் இதுவே செயல்படும்.
  • R2 (இரண்டாம் மொழி):
    முதல் மொழியாக (R1) தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி அல்லாத, வேறு எந்தவொரு மொழியையும் R2 ஆகத் தேர்ந்தெடுக்கலாம். இது ஆங்கிலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியாகவோ இருக்கலாம்.
  • R3 (மூன்றாம் மொழி):
    R1 மற்றும் R2 ஆகிய இரண்டிலும் இடம்பெறாத, முற்றிலும் புதிய ஒரு மொழியை R3 ஆகப் படிக்க வேண்டும். இது மற்றொரு இந்திய மொழியாகவோ அல்லது ஒரு வெளிநாட்டு மொழியாகவோ இருக்கலாம். (உதாரணமாக: ஒரு மாணவர் R1 ஆக தமிழையும், R2 ஆக ஆங்கிலத்தையும் தேர்வு செய்தால், R3 ஆக வேறு ஒரு இந்திய மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்).

மொழிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

இந்த மூன்று மொழிகளையும் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் மாநில அரசுகள், பள்ளிகள் மற்றும் மாணவர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகம் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் கட்டாயப்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் இருப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப பள்ளிகளே மொழிகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

பாடப்புத்தகங்கள்

புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையிலான புதிய மொழிப் பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இருப்பினும், சிபிஎஸ்இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுத் தயாரிக்கப்பட்டிருந்தால், மாநில அரசுகள் வெளியிடும் பாடப்புத்தகங்களையோ அல்லது தனியார் பதிப்பகங்கள் தயாரிக்கும் புத்தகங்களையோ கூட பள்ளிகள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?

கற்பித்தல் முறையில் மாற்றம்

இந்த புதிய பாடத்திட்டத்தின் மூலம் மொழியைக் கற்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதாவது, வெறும் மொழி இலக்கணத்தை மட்டும் மனப்பாடம் செய்யும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, அந்த மொழியை நடைமுறையில் பயன்படுத்திப் பேசுதல், எழுதுதல் மற்றும் சரளமாகத் தொடர்பு கொள்ளுதல் ஆகிய திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

திட்டத்தின் நோக்கம்

மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்ப்பதே இந்த 3 மொழிப் பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் மீதான புரிதலும் மரியாதையும் மாணவர்களிடம் அதிகரிக்கும் என கல்வி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
US Iran War China: ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
US Iran War Hormuz: சொந்த காசில் சூனியம்.! கண்ணிவெடிகளால் வந்த சிக்கல்; ஹார்முஸை திறக்க முடியாமல் தவிக்கும் ஈரான்
சொந்த காசில் சூனியம்.! கண்ணிவெடிகளால் வந்த சிக்கல்; ஹார்முஸை திறக்க முடியாமல் தவிக்கும் ஈரான்
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
Embed widget