மேலும் அறிய

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா? தேர்வு அட்டவணையை திருத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில்  இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு  ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 21ஆம் தேதி ஆங்கிலம், 23ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2ஆம் தேதி இந்தி, மார்ச் 7ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.

ஒரு நாள் இடைவெளியில் தமிழ் தேர்வு, ஆங்கிலத் தேர்வு

பிப்ரவரி 21ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது.

தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.

மாறாக, இந்தி பாடத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி தான் நடைபெறும் என்பதால், அப்பாடத்தைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுக்கும், அறிவியல் தேர்வுக்கும் இடையில் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் அறிவியல் தேர்வுக்கு நன்றாக படிக்க முடியும். அதேபோல், இந்தி பாடத் தேர்வுக்கு முந்தைய கணினி அறிவியல் பாடத் தேர்வுக்கு இரு நாள்களும், பிந்தைய சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 4 நாள்களும் இருப்பதால் அந்தப் பாடங்களை அவர்களால் நன்றாக படிக்க முடியும். இந்தித் தேர்வுக்கு இரு நாள் இடைவெளி இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.

அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு

பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை இரண்டாம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரானது ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.

எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav
கோவை பெண் பாலியல் கொடூரம் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் நடந்தது என்ன? | Kovai Student Sexual Assault
Thanjavur Boy German Girl Marriage | தமிழ் பையன் ஜெர்மன் பொண்ணு தஞ்சாவூரில் டும்..டும்..COUPLE GOALS
Kovai Student Sexual Assault |கூட்டு பாலியல் வன்கொடுமைமாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பயங்கரம்
TVK Karur Stampede Case | பனையூர் வந்த CBI அதிகாரிகள்பரபரக்கும் தவெக அலுவலகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
TN 12th Time Table: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; எந்த தேதியில் என்னென்ன தேர்வுகள்? முழு அட்டவணை இதோ!
TN 12th Time Table: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; எந்த தேதியில் என்னென்ன தேர்வுகள்? முழு அட்டவணை இதோ!
New Hyundai Venue: புதிய வென்யுவை லாஞ்ச் செய்த ஹுண்டாய் - ரூ.7.9 லட்சம் மட்டுமே - காசுக்கு வொர்த்தா நியூ ஜென் மாடல்?
New Hyundai Venue: புதிய வென்யுவை லாஞ்ச் செய்த ஹுண்டாய் - ரூ.7.9 லட்சம் மட்டுமே - காசுக்கு வொர்த்தா நியூ ஜென் மாடல்?
Dude: டூட் படத்தை கழுவி கழுவி ஊத்திய பாக்யராஜ் - இப்படி சொல்லிட்டாரு!
Dude: டூட் படத்தை கழுவி கழுவி ஊத்திய பாக்யராஜ் - இப்படி சொல்லிட்டாரு!
New Hyundai Venue N Line: நியூ வென்யு என்-லைன் - ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், வாய்ஸ் கன்ட்ரோல் - கூடுதல் அப்க்ரேட்கள் என்ன?
New Hyundai Venue N Line: நியூ வென்யு என்-லைன் - ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், வாய்ஸ் கன்ட்ரோல் - கூடுதல் அப்க்ரேட்கள் என்ன?
Embed widget