மேலும் அறிய

CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!

உள்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது

CBSE எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் தான் இந்தியாவில் அனைத்து CBSE பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!

CBSE அமைப்பு தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அனைத்து CBSE பள்ளிகளிலும் கட்டாயமாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்றாம் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய விதிமுறை 2027-28 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.அதாவது இந்த கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம். இந்த மூன்றாம் மொழி 10-ஆம் வகுப்பு பொது தேர்வு பாடங்களில் ஒன்றாக இருக்காது. அதாவது, போர்டு எக்ஸாமில் இது பேப்பராக இருக்காது. ஆனால் மூன்றாம் மொழிக்கான தேர்வு, அந்தந்த பள்ளிகளிலேயே உள்நிலை தேர்வாக நடத்தப்படும்.

இந்த உள்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஒருவேளை மாணவர்கள் முதல் முயற்சியில் மூன்றாம் மொழி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அந்த மாணவருக்கு மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்த பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.


CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!

தற்போது 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அவர்கள் பழைய முறையிலேயே தேர்வுகளை எழுதுவார்கள். ஆனால் இந்த 9ஆம் வகுப்பு பயின்று அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழி கட்டாயமாகிறது என்பதால் மாணவர்களும் பெற்றோரும் அதற்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழி உள்நிலை தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒரு வேளை அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் 10ஆம் வகுப்புக்கு செல்வார்கள். ஆனால் 10ஆம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் 9ஆம் வகுப்புக்கான மூன்றாவது மொழி உள்நிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE -இன் புதிய விதிப்படி, மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மாணவர்கள் பன்மொழித் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காகவும் மும்மொழி கொள்கை கட்டாயம் என்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Nothing Phone 4b Vs 4a: இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
Embed widget