மேலும் அறிய

சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

சிபிஎஸ்இயில் பத்தாம்  மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இதுக்குறித்து இன்று முதல் பள்ளிகளில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்களின் நலன் கருதி அனைத்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானது. இதேப்போன்று  கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் தொடர்பாக முடிவெடுக்க 13 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீதம், 12ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகள்/ மிட் டெர்ம்/ பிரீ போர்ட் தேர்வுகளில் பெற்ற 40 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

  • சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் தான் தற்போது வெளியாகியுள்ள உள்ள இந்த மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பள்ளிகளில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்து பள்ளிகள் அளிக்கப்படும் புகாரினை பரிசீலனை செய்து உரிய பதிலை பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பினால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வு எழுதலாம் எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

எனவே  பள்ளிகளில் மாணவர்கள் அளிக்கும் புகாரினையடுத்து நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால்,  மாணவர்கள் எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத்தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேம்பாட்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இயில் 30 சதவீத  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாளில் அதிக MCQ (multiple choose questios) அடிப்படையிலான கேள்விகள் இருக்கும் எனவும் இந்த தேர்வு முறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாதிரி தாள் போலவே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
Temple Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Embed widget