மேலும் அறிய

சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

சிபிஎஸ்இயில் பத்தாம்  மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இதுக்குறித்து இன்று முதல் பள்ளிகளில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்களின் நலன் கருதி அனைத்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானது. இதேப்போன்று  கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் தொடர்பாக முடிவெடுக்க 13 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீதம், 12ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகள்/ மிட் டெர்ம்/ பிரீ போர்ட் தேர்வுகளில் பெற்ற 40 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

  • சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் தான் தற்போது வெளியாகியுள்ள உள்ள இந்த மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பள்ளிகளில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்து பள்ளிகள் அளிக்கப்படும் புகாரினை பரிசீலனை செய்து உரிய பதிலை பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பினால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வு எழுதலாம் எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

எனவே  பள்ளிகளில் மாணவர்கள் அளிக்கும் புகாரினையடுத்து நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால்,  மாணவர்கள் எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத்தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேம்பாட்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இயில் 30 சதவீத  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாளில் அதிக MCQ (multiple choose questios) அடிப்படையிலான கேள்விகள் இருக்கும் எனவும் இந்த தேர்வு முறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாதிரி தாள் போலவே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Madhampatty Rangaraj Case: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு! பாதை நேரங்களில் மாற்றம்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு! பாதை நேரங்களில் மாற்றம்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Embed widget