மேலும் அறிய

சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

சிபிஎஸ்இயில் பத்தாம்  மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இதுக்குறித்து இன்று முதல் பள்ளிகளில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்களின் நலன் கருதி அனைத்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானது. இதேப்போன்று  கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் தொடர்பாக முடிவெடுக்க 13 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீதம், 12ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகள்/ மிட் டெர்ம்/ பிரீ போர்ட் தேர்வுகளில் பெற்ற 40 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

  • சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் தான் தற்போது வெளியாகியுள்ள உள்ள இந்த மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பள்ளிகளில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்து பள்ளிகள் அளிக்கப்படும் புகாரினை பரிசீலனை செய்து உரிய பதிலை பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பினால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வு எழுதலாம் எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

எனவே  பள்ளிகளில் மாணவர்கள் அளிக்கும் புகாரினையடுத்து நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால்,  மாணவர்கள் எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத்தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேம்பாட்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இயில் 30 சதவீத  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாளில் அதிக MCQ (multiple choose questios) அடிப்படையிலான கேள்விகள் இருக்கும் எனவும் இந்த தேர்வு முறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாதிரி தாள் போலவே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
Embed widget