மேலும் அறிய

Group 2, 2A Exam: மாநிலம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி: தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை - டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?

TNPSC Group 2 2A Mains Exam 2023: குரூப் 2, 2 ஏ தேர்வில் வினா, விடைத் தாள்கள் மாறி வந்திருப்பதாகத் தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப் 2, 2 ஏ தேர்வில் வினா, விடைத் தாள்கள் மாறி வந்திருப்பதாகத் தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், தேர்வையே ரத்து செய்து பிறிதொரு நாளில் நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு குழப்பத்தால் ஏற்பட்ட தாமதத்தை ஈடுசெய்யக் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. 

இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

 55,071 பேர் எழுதும் முதன்மைத் தேர்வு

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வுகள் எனப்படும் பிரதான தேர்வு இன்று (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற இருந்தது. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, குரூப்- 2ஏ முதன்மைத் தேர்வில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு உரிய நேரத்துக்குத் தொடங்கப்படவில்லை.


Group 2, 2A Exam: மாநிலம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி: தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை - டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?

டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?

தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும் தேர்வர்கள் தரப்பில் கூறும்போது, ''தமிழகம் முழுவதும் மிகப் பெரிய குழப்பம் நடந்திருப்பதால், அப்படியே தேர்வு நடத்துவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதல் நேரம் வழங்கினாலும் எதுவும் மாறப் போவதில்லை. தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகிறோம். இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு விடைத்தாள் மாறி மாறி வந்துள்ளது. ஒரு விடைத்தாள் குறைந்தது 100 பக்கங்களை உடையது. 

55 ஆயிரம் பேர் தேர்வை எழுதும் சூழலில், பல லட்சக் கணக்கான பக்கங்களை மதியத்திற்குள் அச்சடித்துக் கொடுக்க முடியாது. அதனால் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்து வேறொரு நாளில் நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
68
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 03:08 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Embed widget