மேலும் அறிய

யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!

பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது- அன்புமணி.

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா... முறைகேடா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் எழுதிய அத்தேர்வுகளின்  விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நடந்ததாக எழுந்துள்ள புகார்கள்தான் இதற்கு காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 48 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 பேர் எழுதிய இந்தத் தேர்வுகளில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப் பட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டன.

முக்கியமான தேர்வில் கூட குளறுபடியா?

அந்த முடிவுகளில்தான் பெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரு தாள்களையும், 3 பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். முதல் தாளில் ஏ, பி என இரு பகுதிகள் உள்ளன. அவற்றில் முதல் பகுதி தேர்வர்களின் தமிழ்மொழிப் புலமையை அறிவதற்கானது. 50 மதிப்பெண்களுக்கான அப்பகுதியில் 40%, அதாவது 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படாது.

இது எப்படி சாத்தியம்?

முதல் தாளின் பி பிரிவில் தேர்வர்களின் விருப்பப்பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப் படும்; அவற்றுக்கு தலா 1.5 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாவது தாளில் 5 தலைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்வு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு 50 மதிப்பெண்கள்.

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 40% மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35% மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முதல் தாளின் பி பிரிவில் 111 மதிப்பெண்கள், அதாவது 74% மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.

இரண்டாம் தாளில் கேட்கப்படும் 5 வினாக்களில் ஒன்றுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவு ஆகிய  பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்படும். மொத்தம் எழுப்பப்படும் 5 வினாக்களில் தங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பில் தான் தேர்வர்கள் கட்டுரை எழுதுவார்கள்.

அப்படி எழுதப்படும் கட்டுரைக்கு, அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவரால் எழுதப்படும் கட்டுரைக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. தலைப்புக்கு பொருத்தமான ஓரிரு தகவல்களை எழுதினால் கூட குறைந்தது 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் வென்ற ஒருவர், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவுமே தெரியாதவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எவராலுமே நம்பமுடியாது

அதேபோல், முதல் தாளில் 54, அதாவது 36% மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 35% என்பது மொத்த மதிப்பெண்களைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. தாள்வாரியாக தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்பட்டால், விருப்பப்பாடத்தில் 54 மதிப்பெண்  எடுத்த பொதுப்பிரிவு மாணவர் ஒருவர் அந்தத் தாளில் தேர்ச்சி பெறவே முடியாது. அப்படிப்பட்டவர் கட்டுரைத் தாளில்  98% மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதை எவராலுமே நம்பமுடியாது.

முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இரண்டாம் தாளில் 98% மதிப்பெண் வழங்கப்பட்டதும் இயல்பானதாக தெரியவில்லை. முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டும்; முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் இவ்வாறு செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் 12 ஆண்டுகளுக்கு முன் இப்போதுதான் முதன்முறையாக நியமிக்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும்; தகுதியுடையவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளை  எழுதினர். அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் எந்த முறைகேட்டுக்கும் இடமளிக்கக் கூடாது.

எனவே, உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளின் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களை  திருத்துவதில் குளறுபடி நடந்ததா? அல்லது முறைகேடு நடந்ததா? என்பது குறித்து விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை ஆள்தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும்’’. 

இவ்வாறு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! சென்னை CIT வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! CIT வெளியிட்ட அறிவிப்பு!
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு: அசல் மார்க் ஷீட் எப்போது?
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு: அசல் மார்க் ஷீட் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
CM Vijay: திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
Bank Holidays: செப்டம்பரில் பாதி நாள் வங்கிகள் இயங்காது - வரிசை கட்டும் பண்டிகைகள், நீளும் விடுமுறை நாட்கள் - முழு லிஸ்ட்
செப்டம்பரில் பாதி நாள் வங்கிகள் இயங்காது - வரிசை கட்டும் பண்டிகைகள், நீளும் விடுமுறை நாட்கள் - முழு லிஸ்ட்
Ather Konarc: 200KM ரேஞ்ச், ஏதரின் முற்றிலும் புதிய கோனார்க் ஸ்கூட்டர் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி? தேறுமா?
200KM ரேஞ்ச், ஏதரின் முற்றிலும் புதிய கோனார்க் ஸ்கூட்டர் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி? தேறுமா?
ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக
ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக
DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
Ola S1Z: இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?
இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?
Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
Embed widget