மேலும் அறிய

“அச்சம் வேண்டாம்; அறிவை சோதிக்க அல்ல; அடுத்தகட்ட நகர்வு” - மாணவர்களுக்கு கமல் அறிவுரை 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பொதுத் தேர்வு எழுத இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார். 


“அச்சம் வேண்டாம்; அறிவை சோதிக்க அல்ல; அடுத்தகட்ட நகர்வு” - மாணவர்களுக்கு கமல் அறிவுரை 

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புப் பொதுத்‌ தேர்வுகள்‌ நாளை (13.03.2023) தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி முடிவடைகின்றனர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி முடிகிறது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள்‌ 23,747 பேர், மாற்றுத்‌ திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக உள்ளது. இவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

கவனிக்க..

தேர்வர்கள் விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா பயன்படுத்தி மட்டுமே எழுத வேண்டும். கலர் பென்சில், பேனாக்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் விடைத்தாளில் ஏதேனும் குறியீடு, பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் முதன்மை விடைத்தாளுடன் இணைந்து வழங்கப்படும். அதனைச் சரிபார்த்து தேர்வர்கள் கையெழுத்து போட்டால் போதும். மேலும் அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூக்கம் முக்கியம் பாஸ்..

,மாணவர்கள் தேர்வு காலங்களில் நன்றாக உறங்க வேண்டும். புத்துணர்வோடு தேர்வுக்கு செல்ல சீரான தூக்கம் அவசியம். குறைந்த அவகாசமே இருக்கிறது என்று நேரத்துக்கு உறங்காமல், இரவு முழுக்கக் கண் விழிப்பது நல்லதல்ல. இது உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். போதுமான அளவில் தூங்கி எழும்பட்சத்தில் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று, தேர்வுக்குத் தயாராகி இருக்கும். பதற்றம் ஏற்படாது.

எளிதாக செரிக்கும் வீட்டு உணவு

தேர்வு நாட்கள் மற்றும் அதற்கு இடைப்பட்ட விடுமுறை நாட்களில், எளிதில் செரிக்கும் வகையிலான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். வெளி உணவுகளையும், செரிக்கத் தாமதமாகும் உணவுகளையும் முடிந்த அளவு தவிர்த்து விடுவது உடல் நலனைப் பாதுகாக்கும். படிக்கும்போது அதிகம் பசிக்கும் என்பதால் கையில் சில ஆரோக்கியமான தின்பண்டங்களையும் உடன் வைத்துக் கொள்ளலாம். 

பள்ளி மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுத வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
Embed widget