மேலும் அறிய

அரசாணை 149ஐ நீக்குக: நவ.23-ல் உண்ணாவிரதம் - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவிப்பு

அரசாணை 149ஐ நீக்கக்கோரியும் போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் நவம்பர் 23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவித்துள்ளது.

அரசாணை 149ஐ நீக்கக்கோரியும் போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் நவம்பர் 23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கம் கூறி உள்ளதாவது:

2013-ஆம்‌ ஆண்டில்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்று அரசாணை எண்‌.252 மற்றும்‌ 71 என்ற வெயிட்டேஜ்‌ முறையில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு முடித்து, சுமார்‌ 24 ஆயிரம்‌ ஆசிரியர்கள்‌ பணி வாய்ப்பு பெற்றனர்‌.

அதிமுக ஆட்சியில் போட்டி தேர்வு

ஆனால்‌ வெயிட்டேஜ்‌ முறை தவறான முறை என்று அரசாங்கம்‌ நீக்கம்‌ செய்தது. அந்த அரசாணைகளால்‌ பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவழங்காமல் மேலும்‌ பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணை எண்‌ 149 என்கிற மறுநியமனப் போட்டி தேர்வு, 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்‌ கொண்டு வரப்பட்டது.

இந்த அராசாணையை தற்போதைய முதல்வர்,‌ அன்றைய எதிர்க்கட்சித்‌தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ மிகவும்‌ கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாமல்‌ இது ஒருள்‌ சூழ்ந்த அரசாணை, இதயமற்ற அரசாணை. ஊழலை வழிவகுக்கக்‌ கூடிய அரசாணை என்றும்‌ திமுக ஆட்சி அமைந்தவுடன்‌ இருள்‌ சூழ்ந்த அரசாணை நீக்கப்படும்‌, ஆசிரியர்‌ நலன்‌ காக்கப்படும்‌ என்றும்‌ கூறினார்‌.

மேலும்‌ தேர்தல்‌ வாக்குறுதி எண்‌ 177ல்‌ 2013 ஆம்‌ ஆண்டு தகுதித்‌ தேர்வில்‌தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று வாக்குறுதி தந்தார்‌. ஆட்சி பீடத்தில்‌ அமர்ந்து 30 மாதங்கள்‌ கடந்த நிலையில்‌ 15க்கும்‌ மேற்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌, உண்ணாவிரதம்‌ என்று பலகட்ட போராட்டங்கள்‌ செய்துள்ளோம்‌.

தேர்தல்‌ வாக்குறுதி

அதோடு அமைச்சர்‌ மற்றும்‌ அதிகாரிகளிடம்‌ பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம்‌. பேச்சு வார்த்தை முடிவில்‌ இந்த அராசாணை எண்‌ 149 நீக்கம்‌ செய்வதாக உறுதி அளித்தனர்‌. ஆனால்‌ இதுவரை அரசாணை எண்‌.149 நீக்கம்‌ செய்யவில்லை மாறாக ஒவ்வோரு போராட்டத்தின்‌ முடிவிலும்‌ பள்ளிக்கல்வி ஆணையர்‌ நந்தகுமாரையும்‌, பள்ளிக்‌ கல்வி செயலர்‌ காகர்லா உஷாவையும்‌ நீக்கம்‌ செய்தனர்‌. இவர்களை நீக்கம்‌ செய்ததனால்‌ தேர்தல்‌ வாக்குறுதி நிறைவேற்றியதாக பொருள்‌ கொள்ளப்படுமா?

இந்த சூழலில்‌ கடந்த அக்டோபர்‌ 25-ஆம்‌ தேதி அன்று தேர்தல்‌ வாக்குறுதியை மறந்து அரசாணை எண்‌ 149ஐ அமல்படுத்தி மறு நியமன போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்து திருச்சியில்‌ பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சர்‌ அலுவலகம்‌முற்றுகை இடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து அமைச்சர் அக்டோபர்‌ 31-ஆம்‌ தேதி சென்னையில்‌ உள்ள தனது தென்பெண்ணை இல்லத்திற்கு அழைத்து பேசினார்‌. இந்த பேச்சு வார்த்தையில்‌,‌ உங்கள்‌ உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்‌ என்றும்‌ நாங்களும்‌ வாக்குறுதி தந்துள்ளோம்‌ என்றும்‌ கூறியதோடு இதற்கான தீர்வு உங்களிடம்‌ ஏதேனும்‌ உண்டா என்று கேட்டார்‌.

நாங்களும்‌ இதற்கான தீர்வாக, ’கலைஞர்‌ ஆட்சி காலத்தில்‌ பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை நிரப்பி உள்ளார்‌. ஆனால்‌ அவர்‌ ஒரு ஆசிரியரைக்‌ கூட போட்டி தேர்வு மூலம்‌ நிரப்பவில்லை. மாறாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்‌ பணி நியமனம்‌ செய்தார்‌ என்றும் ஏற்கெனவே இருந்த திராவிட மாடலை பின்பற்றி தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை (2013, 2014, 2017, 2019, 2022 மற்றும்‌ 2023) என்று பாகுபாடு இல்லாமல்‌ அனைவரின்‌ வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும்‌, தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற ஆண்டின்‌ அடிப்படையிலும்‌ வெயிட்டேஜ்‌ மதிப்பெண்‌ கொடுத்து பணிநியமனம்‌ செய்யுங்கள்‌’ என்றும் கூறினோம்‌.

அதனைத்‌ தொடர்ந்து பள்ளிக்‌ கல்வி அமைச்சர்‌ மற்றும்‌ பள்ளிக்கல்வி இயக்குனரும்‌ ஏற்றுக்‌கொண்டு இது குறித்து பள்ளிக்கல்வி செயலருடன்‌ ஆலோசனை செய்து அரசாணையாக வெளியிடுகிறோம்‌ என்று கூறினார்‌.

மேலும்‌ இது குறித்த கேள்விக்கு, அன்றே ஊடகத்தில்‌ மாற்று வழியை பள்ளிக்கல்வி செயலருடன்‌ ஆலோசனை செய்து யாரும்‌ பாதிக்காத வண்ணம்‌ வெளியிடுவோம்‌ என்றார்‌. எனவே அந்த அரசாணையை வெளியிடக்கோரி வரும்‌ நவம்பர்‌ 23ஆம்‌ தேதி எழும்பூரில் அரசாணை எண்‌149-ஐ நீக்கக்‌ கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ செய்ய உள்ளோம்‌’’ என்று டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget