மேலும் அறிய

Zero Enrolment: மாணவர் சேர்க்கையே இல்லாமல் 8 ஆயிரம் பள்ளிகள்; ஆளே இல்லாமல் பணியாற்றும் 20,000 ஆசிரியர்கள்- அதிர்ச்சித் தகவல்!

Zero Enrolment Admission: மொத்தம் 20,817 ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்ச பள்ளிகள் உள்ளன.

இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகள் மாணவர் சேர்க்கையே இல்லாமல் இயங்கி வருவதாகவும், அங்கு 20,000 ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20,817 ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்ச பள்ளிகள் உள்ளன. அங்கு 3,812 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 17,965 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,000 பள்ளிகள் குறைவு ஆகும். (2022-23 இல் 12,954 பள்ளிகள்)

அடுத்தடுத்த இடங்களில் யார்?

இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் தெலங்கானாவில் (2,245) உள்ளன, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (463) உள்ளது. தெலங்கானாவில் இந்தப் பள்ளிகளில் 1,016 ஆசிரியர்களும், மத்தியப் பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்று 81 பள்ளிகள் உள்ளன. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகப் பதிவுசெய்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரப் பிரதேச மத்யமிக் சிக்ஷா பரிஷத் (UP வாரியம்) தயாராகி வருகிறது.

எங்கெல்லாம் இல்லை?

இதற்கிடையில், ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற பள்ளிகள் எதுவும் இல்லை.

அதேபோல புதுச்சேரி, லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ, சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் டெல்லியிலும் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை.

இதுகுறித்து மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "பள்ளிக் கல்வி என்பது மாநிலப் பட்டியல் என்பதால், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் பிரச்சினையைத் தீர்க்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் போன்ற வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த சில பள்ளிகளை இணைத்துள்ளன" என்று தெரிவித்தார்.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்

நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 33 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஆந்திரப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை ஆசிரியர் பள்ளிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் உள்ளன.


இருப்பினும், ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2022-23 இல் 1,18,190 ஆக இருந்தது, அது 2023-24 இல் 1,10,971 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget