மேலும் அறிய

TNEA Counselling: எனக்கு எண்டே இல்ல..! கடந்த ஆண்டை காட்டிலும் பொறியியல் படிப்பிற்கு கூடுதல் விண்ணப்பங்கள்..

நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கு கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டிலும், பல ஆயிரகணக்கானோர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கு கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டிலும், பல ஆயிரகணக்கானோர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்:

தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகள்  மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் இளநிலைப் படிப்புகளில் மட்டும் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழிக் கலந்தாய்வு மூலம்  நிரப்பப்பட்டு வருகின்றன.  2023 ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த 5ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது.

1.86 லட்சம் பேர் விண்ணப்பம்:

இந்த நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க கூடுதல் நபர்கள் விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க மொத்தமாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் எண்ணிக்கை அளவில் 17 ஆயிரத்து 7 எனும் அளவில் அதிகமாகும். அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவர்கள், கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 18 அயிரத்து 822 எனும் அளவிற்கு எண்ணிக்கையில் அதிகமாகும். இதனிடையே, ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 728 பேர் இதுவரை கலந்தாய்விற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். வரும் 9ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேண்டம் எண் நாளை வெளியீடு:

தொடர்ந்து,  அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை ஒதுக்கப்படுகிறது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் ஜூலை 2ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

கலந்தாய்வு விவரம்:

முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 5ம் தேதி வரை நடைபெறும். அதைதொடர்ந்து, பொது கலந்தாய்வு 7ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் அடுத்ததாக ஆகஸ்டு மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் துணை கலந்தாய்வில் நிரப்பப்படும். தொடர்ந்து எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி.க்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு முடித்துக்கொள்ளப்படும்.

”எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணம்”

கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் படித்த முடித்த உடனேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தான், மாணவர்கள் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக பேசியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் “கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. உதராணத்திற்கு அண்ணா யூனிவர்சிட்டிக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அதிக நிறுவனங்கள் நேர்காணல் நடத்தியுள்ளதாகவும், வேலை வாய்ப்புகளை வழங்க இன்னும் பல நிறுவனங்கள் வர உள்ளன” எனவும் கூறினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget