மேலும் அறிய

‘நான் ரவுடி’... பட்டா கத்தியுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் - பின்னர் நடந்த சம்பவம்..!

“ஊருக்குள் கத்தியை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டேன். இனிமேல் கத்தியை வைத்துக் கொண்டு சுற்ற மாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திவான்சாபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரிப் மகன் தீனதயாளன்( வயது 22 ) அடிக்கடி மது போதையில் வந்து கையில் பட்டாகத்தி வைத்துக் கொண்டு ‘நான் ரவுடி’ என அனைவரையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திவான்சாபுதூர் மளிகை கடைக்கு மகேஸ்வரி சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த தீனதயாளன் கையில் ஒரு பட்டாகத்தி வைத்துக் கொண்டு, பொது இடத்தில் நின்று கொண்டு தகாத வார்த்தையில் பேசிக் கொண்டும், ரவுடித்தனம் செய்து கொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கடையில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரி தீனதயாளனை பார்த்து ஏன் தம்பி இப்படி கத்தியை வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறாய் பேசாமல் போ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தீனதயாளன் மகேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


‘நான் ரவுடி’... பட்டா கத்தியுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் - பின்னர் நடந்த சம்பவம்..!

இதுகுறித்து மகேஸ்வரி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தீனதயாளனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே காவல் துறையினர் முன்னிலையில் தீனதயாளன் கத்தியை வைத்துக் கொண்டு இனி மேல் சுற்ற மாட்டேன் என பேசிய வீடீயோ காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் “ஊருக்குள் கத்தியை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டேன். இனிமேல் கத்தியை வைத்துக் கொண்டு சுற்ற மாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார். 


கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் விளாங்குறிச்சி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது  சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர்ட் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


‘நான் ரவுடி’... பட்டா கத்தியுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் - பின்னர் நடந்த சம்பவம்..!

காவல் துறையினர் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த விகாஸ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வந்த் சூர்யா என்பதும், சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் 40 கிராம் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதை மருந்து 3 கிராம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget