மேலும் அறிய

பெட்ரோல் போடுவோம்.. நகர மாட்டோம்.. உச்சக்கட்ட போதையால் பெட்ரோல் பங்கில் அடிதடி சம்பவம்!

விழுப்புரத்தில் பெட்ரோல் நிலையத்தை குடிபோதையில் வாலிபர்கள் சூறையாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பெட்ரோல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிலைய மேலாளரான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 26) மற்றும் சில ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது அங்கு விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்த 4 வாலிபர்கள், 2 மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் நிரப்ப வந்தனர். அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களது 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் அங்கிருந்த ஊழியர்கள், பெட்ரோல் நிரப்பினர். ஆனால் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களை நகர்த்தாமல் நீண்ட நேரம் அங்கேயே நின்றுள்ளனர்.

உடனே அங்கு வந்த பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்திக், மோட்டார் சைக்கிள்களை நகர்த்தும்படி அந்த வாலிபர்களிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அருண்குமார், இளஞ்செழியன், ஹரிராமன் ஆகிய 3 பேரும் அந்த வாலிபர்களை தடுக்க முயன்ற போது அவர்களும் தாக்கப்பட்டனர். மேலும் குடிபோதையில் நிதானமின்றி இருந்த அந்த 4 வாலிபர்களும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் எந்திரங்கள், பம்புகள் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். அதோடு இருகில் இருந்த மற்ற பொருட்களையும் உடைத்து சூறையாடினர். இவர்களின் இந்த அராஜக செயல்களால் அங்கு பெட்ரோல்- டீசல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், அதனை நிரப்பாமல் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து அவசர, அவசரமாக வேறு பெட்ரோல் நிலையத்திற்கு பறந்துசென்றனர்.


பெட்ரோல் போடுவோம்.. நகர மாட்டோம்.. உச்சக்கட்ட போதையால் பெட்ரோல் பங்கில் அடிதடி சம்பவம்!

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த போதை வாலிபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதோடு அந்த பெட்ரோல் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


பெட்ரோல் போடுவோம்.. நகர மாட்டோம்.. உச்சக்கட்ட போதையால் பெட்ரோல் பங்கில் அடிதடி சம்பவம்!

மேலும், இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்திக், தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்த பிரபா, தீனா உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  இதனிடையே பெட்ரோல் நிலைய மேலாளர், வாடிக்கையாளர்களை போதை வாலிபர்கள் தாக்கி பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் வீடியோவாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget