மேலும் அறிய

மயிலாடுதுறை: மதுபோதையில் திருட்டு முயற்சி : தட்டிக்கேட்ட முதியவரை கட்டையால் அடித்துக்கொன்ற இளைஞர் கைது..!

மயிலாடுதுறை அருகே குடிபோதையில் முதியவரை அடித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வயது 60. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று  அக்கரை கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் வயது 33 என்ற இளைஞர் மதுபோதையில் செங்கல் சூளைக்கு சென்று அங்கு வெட்டி வைத்திருந்த மரங்களை எடுத்துள்ளார். 

 

மயிலாடுதுறை: மதுபோதையில் திருட்டு முயற்சி : தட்டிக்கேட்ட முதியவரை கட்டையால் அடித்துக்கொன்ற இளைஞர் கைது..!
கொலையான முதியவர்

அதனை கண்ட செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் கணேசன், எதற்காக சூளையில் உள்ள மரங்களை எடுக்கிறாய் என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ரஞ்சித்குமார் மதுபோதையில் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து கணேசனை கடுமையாக தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி வயது 50 என்பவர் ஓடிவந்து தடுக்க முயன்றுள்ளார்,  அவரையும் ரஞ்சித்குமார் கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 


மயிலாடுதுறை: மதுபோதையில் திருட்டு முயற்சி : தட்டிக்கேட்ட முதியவரை கட்டையால் அடித்துக்கொன்ற இளைஞர் கைது..!

இதில்  தலையில் பலத்த காயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள பாலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார், அவருக்கு அங்கு முதல் சிகிச்சை உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் பாலையூர் காவல்நிலையத்தில் கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் தன்னை சுயநினைவை பறக்கும் அளவிற்கு மதுகுடித்து விட்டு மதுபோதையில் இருப்பதை காணமுடிகிறது. இதற்கு காவல்துறையினர் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதை சரியான முறையில் தடுக்காததே இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சமுக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் வயதான முதியவரை மதுபோதையில் இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை: மதுபோதையில் திருட்டு முயற்சி : தட்டிக்கேட்ட முதியவரை கட்டையால் அடித்துக்கொன்ற இளைஞர் கைது..!

இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை, கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.  இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget