மேலும் அறிய

Crime: மனைவி வேறொருவருடன் தொடர்பு.. ஆத்திரத்தில் மகன்களை கொன்று தந்தை தற்கொலை

லட்சுமிக்கும், சீகேஹள்ளியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த நாராயணசாமி தனது மனைவியை கண்டித்துள்ளார். 

மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்த காரணத்தால் மகன்களை கொன்று கணவன் தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் சீனவாசப்பூர் தாலுகாவில் சீகேஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நாராயணசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பவன், நிதின் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதனிடையே லட்சுமிக்கும், சீகேஹள்ளியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த நாராயணசாமி தனது மனைவியை கண்டித்துள்ளார். 

ஆனால் லட்சுமி அந்த உறவை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இது ஒருகட்டத்தில் முற்றிப்போகவே மனமுடைந்த நாராயணசாமி விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி தனது மனைவி லட்சுமி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து தனது இரு மகன்களையும் கொன்று உடல்களை தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர் தானும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வெளியே சென்ற லட்சுமி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது கணவன், மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். 

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின்  உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோலார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக திருமணத்தை மீறிய உறவால் மகன்களை கொன்று நாராயணசாமி தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin Reply to EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Reply to EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
"அரசு இதை செய்வது தற்கொலைக்கு சமமானது;" எச்சரிக்கை விடும் அன்புமணி
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Embed widget