மேலும் அறிய

Crime: வெந்நீர் தான் வேற ஒன்னுமில்ல... என் மனைவி ஆசிட் வீசல.. மனைவி ஆசிட் வீசிய வழக்கில் கணவன் பல்டி!

கணவர் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் வெந்நீர் விழுந்ததால் தான் வெந்து போனதாகவும், மனைவி ஆசிட் வீசவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நபர் வழக்கில் புதிய திருப்பதை ஏற்படுத்தியுள்ளார். 

கணவர் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் வெந்நீர் விழுந்ததால் தான் வெந்து போனதாகவும், மனைவி ஆசிட் வீசவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நபர் வழக்கில் புதிய திருப்பதை ஏற்படுத்தியுள்ளார். 

உத்தரப் பிரதேசம், கான்பூர், கூப்பர் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த டப்பு எனும் நபர் இரவு வீட்டுக்கு தாமதமாக திரும்பிய தன் மனைவி பூனத்திடம் “ஏன் தாமதமாக வீட்டுக்கு வந்தாய்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த பூனம் கோபத்தில் தன் கணவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் டப்புவை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும்  இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது மனைவி பூனத்திடம் ஏன் வீட்டுக்கு தாமதமாக வந்தாய் என்று கேட்டபோது ​​​மனைவி கோபமடைந்து சண்டையிடத் தொடங்கியதாகவும், தொடர்ந்து ஆத்திரத்தில் கழிவறையிலிருந்து ஆசிட்டை எடுத்து டப்பு மீது அவர் வீசியதாகவும் பாதிக்கப்பட்ட கணவர் டப்பு காவல் துறையினரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விசாரணைக்கு பிறகு டப்புவின் மனைவி பூனத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், தன் மீது ஆசிட் அடிக்கப்படவில்லை, பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த வெந்நீர்தான் கொட்டியதாக காவல்நிலையத்தில் தான் கொடுத்த புகாரை டப்பு திரும்ப பெற்றுள்ளார். 

அதில், தன் மீது வெந்நீர் விழுந்ததால் தான் வெந்து போனதாகவும், மனைவி என்மீது ஆசிட் எதுவும் வீசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டப்புவின் மனைவியை சிறைக்கு அனுப்பிய ஸ்டேஷன் இன்சார்ஜ் ஆர்.ஜே.கௌதம் தெரிவிக்கையில், “ டப்புவின் முகத்தில் இரசாயன தீக்காயங்களால்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர். திடீரென டப்பு வெந்நீர் கொட்டியததால்தான் இப்படி ஆனதாக தெரிவிக்கிறார்” என்றார்.

மற்றொரு சம்பவம்

இதே போல் முன்னதாக தெற்கு மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் மார்க் பகுதியில் அதிகாலையில் 62 வயதுடைய நபர் ஒருவர் மருத்துவமனையில் வேலை செய்து வந்த பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியான 62 வயதுடைய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

முன்விரோதத்தால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "தெற்கு மும்பையை சேர்ந்தவர் மகேஷ் பூஜாரி (65). இவரும் அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் ஒரு வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வருகின்றனர். 50 வயதுடைய பெண்ணின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் மகேஷ் பூஜாரி உடன் பழக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் வசித்து வந்தனர்.  அதே போன்று மகேஷ் பூஜாரிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டது என தெரிகிறது.

அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அந்த பெண்ணானது மும்பையில் ஒரு மருத்துவமனையில் வேலை  செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டது தெரிகிறது. இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் குழந்தைகள் மகேஷ் பூஜாரியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியிருந்தனர். அந்த பெண்ணும் முதல் மனைவியுடன் இருக்குமாறு சொல்லியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த மகேஷ் பூஜாரி அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஆசிட் அடித்து விட்டு தப்பியோடியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான மகேஷ் பூஜாரி முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.