மேலும் அறிய

தெலுங்கானா: விசாரணைக்காக அழைத்துச்சென்ற பெண்மணி உயிரிழப்பு : என்ன நடந்தது?

தெலுங்கானாவில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 40 வயது பெண்மணி  உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் பாதிரியாராக ஊழியம் செய்து வருபவர் பாலசாமி.  இவரது வீட்டில் 40 வயதான மாரியம்மா என்பவர் வீட்டுவேலைகளுக்காக பணியமர்த்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 15  ஆம் தேதி பாலசுவாமி தனது வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் திருடு போய்விட்டதாக புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கடந்த 17 ஆம் தேதி மாரியம்மாவை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மாரியம்மா உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அம்மாநில பட்டியலின பிரிவு காங்கிரஸ் தலைவர் நாகரிகரி ப்ரீதம் கூறும் போது, “ குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி கம்மம் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் அட்டாகுடுர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பேரில் மாரியம்மா கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ஜூன் 17 ஆம் தேதி இரவு காவல்துறையினர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலில் சுயநினைவை இழந்த  மாரியம்மா அடுத்த நாள் உயிரிழந்தார். இந்தச்சம்பவத்தை அதிகாரிகள் மறைக்க முயற்சிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இவருடன் சேர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும் மாரியம்மாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள் ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை விசாரணை முடியும் வரை பணியிடைநீக்கம் செய்துள்ளார். 

இது தொடர்பாக டிசிபி நாராயண ரெட்டி கூறும் போது,  “ கைது செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணைக்கு உட்ப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட  தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ஜெயராஜ்ஜின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையையும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Embed widget