மேலும் அறிய

PT சாருடன் கள்ளக்காதல்.. கணவனை கொல்ல கூலிப்படை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. மாட்டிய மனைவி!

2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சௌமியாவும் திலீப்பும் சேர்ந்து ரமேஷைக் கொல்ல முயன்றனர். ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திலீப் தனது காரை கொண்டு மோதி விபத்து போல செட்டப் செய்தார்.

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலத்தின் போர்கான் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்களுக்கே தலைசுற்ற வைக்கும் அளவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதனைப் பற்றி நாம் காணலாம். 

கடந்த 2012ம் ஆண்டு போர்கான் கிராமத்தைச் சேர்ந்த பல்லட்டி ரமேஷ் மற்றும் சௌமியா ஆகிய இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த நிலையில் கடந்த 2025, டிசம்பர் 20ம் தேதி திடீரென ரமேஷ் தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கு சௌமியா தகவல் தெரிவித்தார். கணவனை இழந்த துக்கத்தில் அவர் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. அதேசமயம் அவசரமாக இறுதிச் சடங்குகளை செய்த சௌமியா, ரமேஷின் மரணத்திற்கு தொடர்ந்து தான் துக்கத்தில் இருப்பது போல காட்டி வந்துள்ளார். 

இதற்கிடையில் ரமேஷின் மரணம் குறித்த முதல் சந்தேகம் இஸ்ரேலில் வசிக்கும் அவரது தம்பி கேதாரிக்கு எழுந்தது. போர்கான் கிராமத்தைச் சேர்ந்த சில உள்ளூர் மக்கள் ரமேஷின் உடலிலும், கழுத்திலும் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கேதாரி டிசம்பர் 21ம் தேதி வெளிநாட்டிலிருந்து போர்கான் கிராமத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள மேக்லூர் காவல்துறையினரை அழைத்து புகாரளித்தார்.  தனது சகோதரனின் மரணத்திற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் ஜனவரி 2ம் தேதி  தாசில்தார் முன்னிலையில் ரமேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என்பது தெரிந்தது. மூச்சுத் திணறல் காரணமாக  இந்த கொலை நடந்ததை போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக அவர்களின் சந்தேகப் பார்வை சௌமியா பக்கம் திரும்பியது. அவரை கைது செய்து போலீசார் விசார்ணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

நிஜாமாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சௌமியா தற்காலிக ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அதே பள்ளுயில் நந்திபேட் மண்டலத்தின் பட்குனாவைச் சேர்ந்த நலேஷ்வர் திலீப் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர்களின் உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் ரமேஷூக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் சண்டை வெடித்தது. தனது மகிழ்ச்சிக்கு கணவர் ரமேஷ் தடையாக இருப்பதை உணர்ந்த சௌமியா அவரை தீர்த்துக்கட்ட தனது காதலன் நலேஷ்வர் திலீப் உடன் இணைந்து திட்டமிட்டார். 

அதன்படி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சௌமியாவும் திலீப்பும் சேர்ந்து ரமேஷைக் கொல்ல முயன்றனர். ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திலீப் தனது காரை கொண்டு மோதி விபத்து போல செட்டப் செய்தார். ஆனால் அதில் ரமேஷ் இலேசான காயங்களுடன் தப்பினார். இதனைத் தொடர்ந்து சௌமியா கூலிப்படை உதவியை நாட முடிவு செய்தார்.

தனது தங்க மோதிரத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து கூலிப்படையை ஏற்பாடு செய்தார். டிசம்பர் 19ம் தேதி கூலிப்படை அறிவுறுத்தலின்படி தண்ணீரில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து ரமேஷூக்கு சௌமியா கொடுத்தார். உடனடியாக அவரை கொல்ல வருமாறு கூலிப்படைக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்த யாரும் போன் எடுக்கவில்லை. 

இதனால் அதிருப்தியடைந்த அவர் திலீப்பிற்கு தகவல் தெரிவித்தார். திலீப் தனது சகோதரன் அபிஷேக் உடன்  வந்து சௌமியா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த ரமேஷின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர். அவரது முகத்தை தலையணையால் அழுத்தினர். இதில் துடிதுடித்து சௌமியா கண்முன்னே ரமேஷ் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் சௌமியா, திலீப், அபிஷேக், ஜிதேந்தர், ஸ்ரீராம் மற்றும் ராமாவத் ராகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மௌஹ்சின் என்ற குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Gold rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Embed widget