மேலும் அறிய

காதலியை தற்கொலைக்கு தூண்டிய காதலன்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக, காதலனை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலைக்கு துாண்டியதாக, காதலன் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக, காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த வழுதாவூர், கீரைக்காரர் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜ்குமார், (வயது 20) இவரும், அம்மணகுப்பம் கிராமத்தை சேர்ந்த மணவாளன் மகள் சிவரஞ்சனி, 20, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிவரஞ்சனி கடந்த 15ம் தேதி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பினர்.

சிவரஞ்சனியின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், ராஜ்குமாரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளது தெரியவந்தது. விசாரணையில், ராஜ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவரஞ்சனி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிவரஞ்சனியை தற்கொலைக்கு துாண்டியதாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

தற்கொலைக்கு தூண்டுதல்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 தற்கொலைக்குத் தூண்டுவதைத் தண்டிக்கும்.  S.306 - தற்கொலைக்குத் தூண்டுதல் - எந்தவொரு நபரும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலைக்குத் தூண்டுபவர் எவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.” பிரிவு 306 'தற்கொலைக்குத் தூண்டுதல்' என்ற தண்டனையை பரிந்துரைக்கிறது, பிரிவு 309 'தற்கொலைக்கு முயற்சி' என்ற தண்டனையை விதிக்கிறது. தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு 306 இன் எல்லைக்கு வெளியே உள்ளது, மேலும் அது பிரிவு 107, IPC உடன் படிக்கப்பட்ட பிரிவு 309 இன் கீழ் மட்டுமே தண்டனைக்குரியது.

வேறு சில அதிகார வரம்புகளில், தற்கொலைக்கு முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாக இல்லாவிட்டாலும், அதைத் தூண்டுபவர் தண்டனைக்குரியவராகக் கருதப்படுகிறார். அங்குள்ள விதி தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கும் தண்டனை வழங்குகிறது. எனவே தற்கொலைக்கு முயற்சிப்பதற்கான தண்டனை விரும்பத்தக்கதாகக் கருதப்படாத இடங்களில் கூட, அதைத் தூண்டுதல் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூக நலனுக்காக, தற்கொலைக்கு உதவி செய்தல் மற்றும் தற்கொலைக்கு உதவி செய்தல் ஆகியவை தண்டனைக்குரியவையாகக் கருதப்படுகின்றன. அத்தகைய தண்டனை விதி இல்லாததால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கவும் இத்தகைய விதி விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget