மேலும் அறிய

புழல் சிறையில் ஏற்பட்ட நட்பு....ஸ்கெட்ச் போட்டு திருட்டு...தட்டித்தூக்கிய போலீஸ்...!

திண்டிவனம் பகுதியில் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். 36 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், பிரம்மதேசம், ரோஷணை பகுதிகளில் பகல் நேரங்களில், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து வந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், திண்டிவனம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு திண்டிவனம் அகூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவரான திண்டிவனம் அடுத்த கோவடி பகுதியை சேர்ந்த வரும், தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருபவருமான கனகு என்கிற கனகராஜ் (வயது 38) என்பவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில், நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, கனகராஜ் மற்றும் அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று சுற்றி வளைத்து மடக்கிபிடித்தனர். விசாரணையில், கனகராஜுடன் தப்பி ஓட முயன்றது சென்னை அகரம் அடுத்த தென் சேலையூர் பகுதியை சேர்ந்த மோகன் என்கிற சகாயராஜ் (44) திருவல்லிக்கேணி அயோத்திய குப்பம் பகுதியை சேர்ந்த பாட்டில் மணி என்கிற மணிகண்டன் (31) என்பதும் தெரியவந்தது. இதில் சகாயராஜ் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளும், மணிகண்டன் மீது 16 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும், வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நேரத்தில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இவர்கள், திண்டிவனம் பகுதிக்கு வந்து, கூட்டாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திண்டிவனத்தில் 3 வீடுகளிலும், ரோஷனை பகுதியில் 2 வீடுகளிலும், பிரம்மதேசம் பகுதியில் ஒரு வீடு என்று மொத்தம் 6 இடங்களில் பகல் நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 36 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget