![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விழுப்புரத்தில் பரபரப்பு... வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காததால் இளைஞர் வெட்டி கொலை
விழுப்புரத்தில் வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் இளைஞரை வழிமறித்து வெட்டி கொலை செய்த கஞ்சா போதை இளைஞர்.
![விழுப்புரத்தில் பரபரப்பு... வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காததால் இளைஞர் வெட்டி கொலை Villupuram crime They cut the road and killed him because he did not pay interest TNN விழுப்புரத்தில் பரபரப்பு... வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காததால் இளைஞர் வெட்டி கொலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/04/b18fc9974f097886fa3734f5c55a3ade1696440224520113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் நகரத்திற்கு உட்பட்ட சித்தேரிக்கரை முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (எ) ராம்குமார் (32). இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே தெருவை சேர்ந்தவர் பாலாஜி(35) வேலைக்கு செல்லாமல் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி அப்பகுதியில் ரவுடிசம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்குமாரிடம் பாலாஜி வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் ஆனால் ராம்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்குமார் மீது கடும் கோபத்தில் இருந்த பாலாஜி இன்று மாலை 6 மணியளவில் ராம்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது இரயில்வே கேட் அருகில் ராம்குமாரை வழிமறித்த பாலாஜி மற்றும் அவனது கூட்டாளிகள் ராம்குமாரை தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் ராம்குமார் சரிந்து விழுந்தார். உடனடியாக பாலாஜி அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் ராம்குமாரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் விழுப்புரம் நகர காவல்துறையினர் தடையங்களை சேகரித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள விழுப்புரம் நகர காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பாலாஜி மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் ஒரே தெருவை சேர்ந்த நபரை கஞ்சா போதை இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் பெண் தற்கொலை- உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்
விழுப்புரம் அருகே ரயில் நிலையத்தில் குண்டு வீச்சு.. மீண்டும் தலை தூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)