மேலும் அறிய

விழுப்புரத்தில் பரபரப்பு... வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காததால் இளைஞர் வெட்டி கொலை

விழுப்புரத்தில் வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் இளைஞரை வழிமறித்து வெட்டி கொலை செய்த கஞ்சா போதை இளைஞர்.

விழுப்புரம் நகரத்திற்கு உட்பட்ட சித்தேரிக்கரை முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (எ) ராம்குமார் (32). இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே தெருவை சேர்ந்தவர் பாலாஜி(35) வேலைக்கு செல்லாமல் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி அப்பகுதியில் ரவுடிசம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்குமாரிடம் பாலாஜி வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் ஆனால் ராம்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்குமார் மீது கடும் கோபத்தில் இருந்த பாலாஜி இன்று மாலை 6 மணியளவில் ராம்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது இரயில்வே கேட் அருகில் ராம்குமாரை வழிமறித்த பாலாஜி மற்றும் அவனது கூட்டாளிகள் ராம்குமாரை தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் ராம்குமார் சரிந்து விழுந்தார். உடனடியாக பாலாஜி அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் ராம்குமாரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் விழுப்புரம் நகர காவல்துறையினர் தடையங்களை சேகரித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள விழுப்புரம் நகர காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பாலாஜி மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் ஒரே தெருவை சேர்ந்த நபரை கஞ்சா போதை இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே ஆசிட் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதிய அரசுப் பேருந்து; சாலையில் வழிந்தோடிய 30 டன் ஆசிட்!

திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் பெண் தற்கொலை- உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்

விழுப்புரம் அருகே ரயில் நிலையத்தில் குண்டு வீச்சு.. மீண்டும் தலை தூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget