மேலும் அறிய

இன்ஸ்டாகிராம் காதல்... பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி... 4 இளைஞர்களை கைது செய்த போலீஸ்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் காதல் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே (13) வயது எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் முரளி (23) ,ஜானகிராமன் என்பவரது மகன்கள் தனசேகர் (20), திருநாவுக்கரசு (21) மற்றும் பிரதாபன் என்பவரது மகன் பிரகலாதன் (21) ஆகிய நான்கு பேரிடமும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. 

பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி 

இந்நிலையில், இந்த இளைஞர்கள் சிறுமி இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி வரவழைத்து தனித் தனியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து சிறுமியின் தாய் ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து ரோசனை போலீசார் விசாரணை மேற்கொண்டு திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த வாலிபர்களை அனுப்பி வைத்தனர்.

4 இளைஞர்கள் கைது 

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருபாலட்சமி தலைமையிலான உதவி ஆய்வாளர் ராதா மற்றும் போலீசார் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது பள்ளி மாணவியிடம் தனித் தனியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள இச்சம்பவம் இப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தினமும் கண்காணிக்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தகுந்த காரணங்களுக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை - இபிஎஸ்
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை - இபிஎஸ்
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!
52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
Embed widget