மேலும் அறிய

மது அருந்தும்போது தகராறு...! வீட்டை பிரிந்து இறங்கி நண்பனை கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருந்து விற்பனை பிரதிநிதியை கொலை செய்த நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மகன் தனசீலன் (35), மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் என்பவரின் மகன் கூலித்தொழிலாளி அஜித் என்கிற கோதண்டபாணி (26). நண்பர்களான தனசீலனும் அஜீத்தும் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று தனசீலன், அஜித் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அதே பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது தனசீலனிடம் மது தருமாறு அஜித் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அஜித்தை தனசீலன் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் தனசீலனை அன்றைய தினமே கொலை செய்ய வேண்டும் என்று திட்டம்போட்டார். அதன்படி அன்று இரவு 11 மணியளவில் அஜித், தனசீலன் வீட்டிற்கு வந்தார். அவரது வீட்டின் முன்பக்க, பின்பக்க கதவுகள் தாழிடப்பட்டிருந்த நிலையில் அஜித், பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு வழியாக அத்துமீறி மாடிக்கு ஏறிச்சென்று வீட்டின் பின்புறம் சமையல் அறை மேலிருந்த ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தார்.


மது அருந்தும்போது தகராறு...! வீட்டை பிரிந்து இறங்கி நண்பனை கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

பின்னர் அங்கு மதுபோதையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த தனசீலனை அஜித் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தனசீலனின் முகத்தில் அஜித், தலையணையை வைத்து அழுத்திக்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து தனசீலனின் மனைவி எழிலரசி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.


மது அருந்தும்போது தகராறு...! வீட்டை பிரிந்து இறங்கி நண்பனை கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அஜித் என்கிற கோதண்டபாணிக்கு தனசீலனை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துமீறி வீடு புகுந்து தாக்கிய குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். ஏக காலம் என்பதால் அஜித், ஒரு ஆயுள் தண்டனையான 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதையடுத்து அஜித், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget