மேலும் அறிய

விழுப்புரத்தில் வட்டாட்சியர் காருக்கு தீ வைத்த இளைஞர் - தொடந்து லஞ்சம் வாங்கியதால் அதிருப்தி

’’காரை கொளுத்திய ரஞ்சித் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்’’

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் காரை இளைஞர் ஒருவர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் கண்டாச்சிபுரம் தாலுக்கா அலுவலகம் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வட்டாட்சியரின் பொலிரோ கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டு போர்டிகோ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்தவர்கள் கார் தீ பற்றி எரிவதை கண்டு காரில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
விழுப்புரத்தில் வட்டாட்சியர் காருக்கு தீ வைத்த இளைஞர் - தொடந்து லஞ்சம் வாங்கியதால் அதிருப்தி

மேலும் வட்டாட்சியரின் வாகனம் தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்கின்ற இளைஞர் வட்டாட்சியர் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியை சுத்தியால் உடைத்து பின்னர் பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் வார்னிஷை கார் உள்ளே ஊற்றி தீ வைத்தது சிசிடிவி காட்சி பதிவுகளில் தெரிய வந்தது.


விழுப்புரத்தில் வட்டாட்சியர் காருக்கு தீ வைத்த இளைஞர் - தொடந்து லஞ்சம் வாங்கியதால் அதிருப்தி

இதைத் தொடர்ந்து வட்டாட்சியரின் காருக்கு தீ வைத்த ரஞ்சித்தை அரை மணி நேரத்தில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ரஞ்சித்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாகவும், அதற்காக தான் காரை கொளுத்தியாதவும் ஏற்கனவே இரு முறை வட்டாட்சியர் அலுவலக கண்ணாடிகளை தான் தான் உடைத்ததாகவும் ரஞ்சித் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் தாயார் தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனவும் அவனை அதற்கான சிகிச்சையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீசார் இந்த தீ விபத்து தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டாச்சிபுரம் வட்டாட்சியரின் கார்த்தி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget