மேலும் அறிய

Crime: பதறவைத்த வீடியோ.. 9 இடத்தில் சரமாரியாக குத்து.. மனைவியை குத்திக்கொன்ற கொடூர கணவன் - சந்தேகத்தால் விபரீதம்

வேலூரில் மனைவியை பொது இடத்தில் வைத்து 9 முறை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற கணவனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது குடியாத்தம். குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி அருகில் அமைந்துள்ளது அழிஞ்சிகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெய்சங்கர். அவருக்கு வயது 43. அவருடைய மனைவி புனிதா. அவருக்கு வயது 32. ஜெய்சங்கர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

சந்தேக புத்தி:

ஜெய்சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தால் நாளடைவில் ஜெய்சங்கர் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதன் காரணமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடில் தகராறில் ஈடுபட்டு வந்த ஜெய்சங்கர், தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை மீதிலும் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு புனிதா ஆம்பூரில் உள்ள தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். தனது மனைவிக்காக ஏற்கனவே ஜெய்சங்கர் அந்த இடத்தில் காத்திருந்தார். மேலும், அவர் கையில் கத்தியை மறைத்து வைத்திருந்தார்.

9 இடங்களில் கத்திக்குத்து:

தனது மனைவி புனிதாவை பேருந்து நிறுத்தத்தில் கண்டதும் ஜெய்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ஒரு முறை, இரு முறையல்ல, தொடர்ந்து 9 முறை மனைவி புனிதாவை ஜெய்சங்கர் கத்தியால் மிக கொடூரமாக குத்தியுள்ளார். சரமாரியான கத்துக்குத்துக்கு ஆளான புனிதா சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

பதைபதைக்கும் வீடியோ:

இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கே அருகில் ஏராளமான பொதுமக்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் யாருமே புனிதாவை காப்பாற்ற முன்வரவில்லை. ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொது இடத்தில் மனைவியை 9 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குடும்பங்களில் மது போதை காரணமாக பெண்கள் மீது வீண் சந்தேகம் கொண்டு வன்முறைகளை தொடுக்கும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது சமூகத்திற்கும், குடும்பங்களுக்கும் ஆரோக்கியமான போக்கல்ல என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

மேலும் படிக்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

மேலும் படிக்க: Crime: “நிரந்தர வேலை கிடைக்காதோ என்ற அச்சம்” - 3வது பெண் குழந்தையை கொன்ற தம்பதி.. ராஜஸ்தானில் கொடூரம்!

தலைப்பு செய்திகள்

"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget