மேலும் அறிய

Crime: மனைவியின் கட்டைவிரலை கடித்த கணவன்! தடுக்க வந்த தம்பிக்கும் கடி - நடந்தது என்ன?

உத்தரபிரதேசத்தில் குடும்பத் தகராறில் மனைவியின் கட்டை விரலை கணவனே கடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். சில இடங்களில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிகிறது. சில நேரங்களில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கட்டை விரலை கடித்து வைத்த கணவர்:

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிலிபிட். இங்கு அமைந்துள்ளது சராவ்ரி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் திலக் சந்திரா. இவரது மனைவி ரேகாதேவி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது அடிக்கடி நடந்து வந்துள்ளளது. இந்த நிலையில், சமீப நாட்களாக திலக் சந்திரா கருத்து மனைவியுடனான சண்டையின்போது அவரை தாக்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 14-ந் தேதியும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திலக் சந்திரா அவரது மனைவி ரேகா தேவியை அடிக்க முயற்சித்துள்ளார். அதை ரேகா தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, ஆத்திரத்தில் மனைவி என்றும் பாராமல் அவரது வலது கையின் கட்டை விரலை கடித்துள்ளார். இதனால், ரேகா வலியில் துடித்துள்ளார்.

தம்பிக்கும் கடி:

திடீரென ரேகாவின் அலறல் குரல் கேட்டதால், வீட்டின் உள்ளே இருந்த திலக் சந்திராவின் தம்பி வீறு சந்திரா ஓடி வந்துள்ளார். அப்போது, அவர் தனது அண்ணன் திலக் சந்திராவை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், திலக் சந்திரா ஆத்திரத்தில் தனது தம்பியின் கட்டை விரலையும் கடித்துள்ளார். ரேகா தேவி மற்றும் வீறு சந்திரா இருவரும் வலியில் துடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜகன்பாத் காவல் நிலையத்தில் ரேகா தேவி தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். காரணமே இல்லாமல் தன்னை அடிப்பதாகவும், தனது கட்டை விரலை கடித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். ரேகா தேவியின் புகார் அடிப்படையில் திலக் சந்திரா மீது 504 சட்டப்பிரிவு, 325 மற்றும் 323 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்பத் தகராறில் மனைவியின் கட்டை விரலை கணவனே கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Crime: உச்சகட்ட கோபம்! ஸ்க்ரூடிரைவரால் 41 முறை மனைவியை கொலை செய்த கொடூரம்: கணவன் வெறிச்செயல்!

மேலும் படிக்க: அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்! போலீஸ் பிடியில் இருந்து தப்பிய ரவுடிகளுக்கு கை, கால் முறிவு - நடந்தது இதுதான்!

தலைப்பு செய்திகள்

" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
" பேரப் பிள்ளைகள் உள்ள வயதில் சிறுமியுடன் காதல் திருமணம் " முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget