மேலும் அறிய

Crime : வாட்ச் திருடியதாக மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர்கள்.. அதிர்ந்த கிராமம்.. தீவிர விசாரணை..

தமிழகத்தில் 2 வாரங்களில் 2 பெண் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் 2 வாரங்களில் 2 பெண் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க உத்தரபிரதேசத்தில் மாணவன் ஒருவர் வாட்ச் திருடியதாகக் கூறி ஆசிரியர்கள் அடிக்க அதில் படுகாயமடைந்து மாணவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் உள்ளது மாடயா கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் சேரவந்த தில்ஷன் என்ற ராஜாவுக்கு தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட தந்தையின் புகார் மனுவில், "தில்ஷனின் சொந்த ஊர் பாஷ்சிம் மாடாய கிராமத்தில் உள்ள கசாவா சவுகி என்ற ஊர். இவர் ஆர் எஸ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பில் சேர சென்றிருந்தார். ஜூலை 23 ஆம் தேதி அவர் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவர் ஒரு கைக்கடிகாரத்தை திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உடனே விசாரணை என்ற பெயரில் சிவ்குமார் யாதவ் என்ற ஆசிரியர் தில்ஷனை அடித்துள்ளார். பின்னர் சிவ்குமாருடன் பிரபாகர், விவேக் ஆகியோரும் இணைந்து கொண்டனர். இதில் தில்ஷன் காயமடைந்தார். உடனே அதிர்ந்து போன ஆசிரியர்கள் தில்ஷனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி அவரை கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதனால், தில்ஷனை கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தில்ஷன் இறந்து விட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே மரணத்துக்கான காரணம் ஆசிரியர்கள் தாக்கியது தானா என்பது தெரியவரும் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக ஊர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் சிவ்குமார் யாதவ், பிரபாகர், விவேக் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று ஊர்மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

நம் நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 350க்கும் மேற்பட்ட குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்பு தொடங்கி பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறை என பல்வேறு குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகின்றன. வீட்டில் பெற்றோர் குழந்தைகளை படி, படி என்று துன்புறுத்துவதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்றே பட்டியலிடப்படுகிறது.

கிராமத்தில் இருந்து கல்விக் கனவோடு வந்த சிறுவன் வன்முறையால் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget