மேலும் அறிய

Crime : வாட்ச் திருடியதாக மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர்கள்.. அதிர்ந்த கிராமம்.. தீவிர விசாரணை..

தமிழகத்தில் 2 வாரங்களில் 2 பெண் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் 2 வாரங்களில் 2 பெண் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க உத்தரபிரதேசத்தில் மாணவன் ஒருவர் வாட்ச் திருடியதாகக் கூறி ஆசிரியர்கள் அடிக்க அதில் படுகாயமடைந்து மாணவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் உள்ளது மாடயா கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் சேரவந்த தில்ஷன் என்ற ராஜாவுக்கு தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட தந்தையின் புகார் மனுவில், "தில்ஷனின் சொந்த ஊர் பாஷ்சிம் மாடாய கிராமத்தில் உள்ள கசாவா சவுகி என்ற ஊர். இவர் ஆர் எஸ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பில் சேர சென்றிருந்தார். ஜூலை 23 ஆம் தேதி அவர் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவர் ஒரு கைக்கடிகாரத்தை திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உடனே விசாரணை என்ற பெயரில் சிவ்குமார் யாதவ் என்ற ஆசிரியர் தில்ஷனை அடித்துள்ளார். பின்னர் சிவ்குமாருடன் பிரபாகர், விவேக் ஆகியோரும் இணைந்து கொண்டனர். இதில் தில்ஷன் காயமடைந்தார். உடனே அதிர்ந்து போன ஆசிரியர்கள் தில்ஷனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி அவரை கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதனால், தில்ஷனை கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தில்ஷன் இறந்து விட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே மரணத்துக்கான காரணம் ஆசிரியர்கள் தாக்கியது தானா என்பது தெரியவரும் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக ஊர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் சிவ்குமார் யாதவ், பிரபாகர், விவேக் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று ஊர்மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

நம் நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 350க்கும் மேற்பட்ட குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்பு தொடங்கி பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறை என பல்வேறு குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகின்றன. வீட்டில் பெற்றோர் குழந்தைகளை படி, படி என்று துன்புறுத்துவதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்றே பட்டியலிடப்படுகிறது.

கிராமத்தில் இருந்து கல்விக் கனவோடு வந்த சிறுவன் வன்முறையால் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
Embed widget