மேலும் அறிய

மனைவி குளிக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்! நண்பர்களை அதிகரிக்க திட்டமாம்!

இது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் அவரது பேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டது.

உத்திரப்பிரதேசத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஒரு நபர் தனது மனைவி குளிக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார். தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் அவரது பேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் ஜஸ்ரானாவில் உள்ள போலீசார் அந்த நபர் மீது ஐடி சட்டம் பிரிவு 67ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புகாரின்படி, அந்த பெண்ணின் கணவர் டெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வருகிறார்.சர்க்கஸில் வேலை செய்கிறார். அவர் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர் என மனைவி தெரிவித்துள்ளார்.


மனைவி குளிக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்! நண்பர்களை அதிகரிக்க திட்டமாம்!

புகார் அளித்த மனைவி தனது கணவருடன் அடிக்கடி வீடியோ அழைப்புகள் மூலம் பேசுவதாகவும், அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் தன்னைப் பதிவுசெய்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியதாகவும் அவர் கூறினார்.

அவருக்கு இது தெரிய வந்ததும் தன்னுடைய  பேஸ்புக் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாறு செய்ததாக அவரிடம் கூறியுள்ளார்.

அவர் பதிவேற்றிய அந்தப் புகைப்படங்களை நீக்கும்படி மனைவி அவரிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தம்பதியினர் விரைவில் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் எஸ்பி  ரன்விஜய் சிங் தெரிவித்தார். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

 

முன்னதாக,

உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்புரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, வயலில் இருந்து செம்புவில் செய்யப்பட்ட கத்தி, வேல் உள்ளிட்ட ஆயுதங்கள் அதிகம் கிடைத்தன. இவைகள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கூறப்படுகின்றன. தன் விவசாய நிலத்தில் இந்த பொருள்கள் கிடைக்கவே, இவைகளை தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன புதையல் என்று நினைத்த விவசாயி தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் இது குறித்த விஷயம் காவல்துறையினருக்குத் தெரியவரவே உடனடியாகச் சென்று அவைகளை கைப்பற்றிய அவர்கள் இந்திய தொல்லியல் துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.  

4000 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்:

விரைந்து வந்த அவர்கள் அந்த பொருள்களை ஆய்வு செய்ததில் அது 4000 ஆண்டுகளுக்கு முந்தைய செம்பு காலத்தைச் சேர்ந்தவை என்று கணித்துள்ளனர். இந்த செம்புப் பொருள்கள் கல்கோலிதிக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் காவி நிற மட்பாண்டங்கள்  இருப்பது இந்த காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிகப்படியான ஆயுதங்கள் ஓரிடத்தில் குவிந்திருக்க காரணம் என்ன? அவைகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவா? அல்லது இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டனவா? என்பது பற்றி தெரிய வேண்டியது இருக்கிறது என்று தொல்லியல் துறையின் இயக்குநர் புவன் விக்ரம் தெரிவித்துள்ளார்

கிமு 2000 ஆண்டு காலம் பழமையானது:

இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரிய அளவிலான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக அல்லது நிலத்திற்காக சண்டையிட்டிருப்பதைக் காட்டுகிறது என்றும் சாதாரண மனிதர்களால் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது என்று தொல்லியல் துறையைச் சேர்ந்த ராஜ் குமார் கூறியுள்ளார். இந்த ஆயுதக் கலாச்சரமானது கி.மு 1500 அல்லது 2000 ஆண்டுகாலத்தையது என்று கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் அதே காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொருள்கள் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்ற முடிவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget