மேலும் அறிய

மனைவி குளிக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்! நண்பர்களை அதிகரிக்க திட்டமாம்!

இது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் அவரது பேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டது.

உத்திரப்பிரதேசத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஒரு நபர் தனது மனைவி குளிக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார். தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் அவரது பேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் ஜஸ்ரானாவில் உள்ள போலீசார் அந்த நபர் மீது ஐடி சட்டம் பிரிவு 67ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புகாரின்படி, அந்த பெண்ணின் கணவர் டெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வருகிறார்.சர்க்கஸில் வேலை செய்கிறார். அவர் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர் என மனைவி தெரிவித்துள்ளார்.


மனைவி குளிக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்! நண்பர்களை அதிகரிக்க திட்டமாம்!

புகார் அளித்த மனைவி தனது கணவருடன் அடிக்கடி வீடியோ அழைப்புகள் மூலம் பேசுவதாகவும், அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் தன்னைப் பதிவுசெய்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியதாகவும் அவர் கூறினார்.

அவருக்கு இது தெரிய வந்ததும் தன்னுடைய  பேஸ்புக் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாறு செய்ததாக அவரிடம் கூறியுள்ளார்.

அவர் பதிவேற்றிய அந்தப் புகைப்படங்களை நீக்கும்படி மனைவி அவரிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தம்பதியினர் விரைவில் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் எஸ்பி  ரன்விஜய் சிங் தெரிவித்தார். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

 

முன்னதாக,

உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்புரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, வயலில் இருந்து செம்புவில் செய்யப்பட்ட கத்தி, வேல் உள்ளிட்ட ஆயுதங்கள் அதிகம் கிடைத்தன. இவைகள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கூறப்படுகின்றன. தன் விவசாய நிலத்தில் இந்த பொருள்கள் கிடைக்கவே, இவைகளை தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன புதையல் என்று நினைத்த விவசாயி தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் இது குறித்த விஷயம் காவல்துறையினருக்குத் தெரியவரவே உடனடியாகச் சென்று அவைகளை கைப்பற்றிய அவர்கள் இந்திய தொல்லியல் துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.  

4000 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்:

விரைந்து வந்த அவர்கள் அந்த பொருள்களை ஆய்வு செய்ததில் அது 4000 ஆண்டுகளுக்கு முந்தைய செம்பு காலத்தைச் சேர்ந்தவை என்று கணித்துள்ளனர். இந்த செம்புப் பொருள்கள் கல்கோலிதிக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் காவி நிற மட்பாண்டங்கள்  இருப்பது இந்த காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிகப்படியான ஆயுதங்கள் ஓரிடத்தில் குவிந்திருக்க காரணம் என்ன? அவைகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவா? அல்லது இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டனவா? என்பது பற்றி தெரிய வேண்டியது இருக்கிறது என்று தொல்லியல் துறையின் இயக்குநர் புவன் விக்ரம் தெரிவித்துள்ளார்

கிமு 2000 ஆண்டு காலம் பழமையானது:

இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரிய அளவிலான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக அல்லது நிலத்திற்காக சண்டையிட்டிருப்பதைக் காட்டுகிறது என்றும் சாதாரண மனிதர்களால் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது என்று தொல்லியல் துறையைச் சேர்ந்த ராஜ் குமார் கூறியுள்ளார். இந்த ஆயுதக் கலாச்சரமானது கி.மு 1500 அல்லது 2000 ஆண்டுகாலத்தையது என்று கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் அதே காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொருள்கள் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்ற முடிவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

லண்டனில் வேலை... பிகாம் பட்டதாரியை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி
லண்டனில் வேலை... பிகாம் பட்டதாரியை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி
133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Enfield Classic New Features: ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்.! முதல் முறையா 2 புதிய அம்சங்கள் கிடைக்கும்
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்.! முதல் முறையா 2 புதிய அம்சங்கள் கிடைக்கும்
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Embed widget