மேலும் அறிய

UP Crime: தாயை துப்பாக்கியால் சுட்டும், மனைவியை சுத்தியலால் அடித்தும், 3 பிள்ளைகளை மாடியில் இருந்து வீசியும் கொலை - உபியில் ஷாக்

UP Crime: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் தாய், மனைவி மற்றும் 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Crime: உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவால்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

குடும்ப நபர்களை கொடூரமாக கொன்ற நபர்:

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு,  தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை:

சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலபூர் என்ற கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் அரங்கெறியுள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொலை செய்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது. முதலில் அவர் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.  பிறகு தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்படி குடும்பத்தில் இருந்த 5 பேரையும் அடுத்தடுத்து கொலை செய்த அந்த நபர், இறுதியாக தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

யார் அந்த 6 பேர்? 

இதுதொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், " பாலாபூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அனுராக் சிங் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் கூறப்படும் தகவல் கிடைத்தது. விசாரணையில், 40 வயதான தனது மனைவி பிரியங்காவை கொன்றதும், 65 வயதான தனது தாயார் சாவித்ரியை கொன்றதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, முறையே12, 9 மற்றும் ஆறு வயதுடைய தனது குழந்தைகளையும் அவர் கொலை செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: Rohit Sharma: போதும்டா சாமி..! மும்பை அணிக்கு முழுக்கு போடும் ரோகித் சர்மா - அவரே பேசும் வீடியோ இணையத்தில் வைரல்

காரணம் என்ன?

45 வயதான அனுராக் சிங் மதுப்பழக்கத்தை விட வேண்டும் எனவும், இதற்காக போதை ஒழிப்பு மையத்திற்கு அவர் செல்ல வேண்டும் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. அதே கோரிக்கையை வலியுறுத்தி  தான் வெள்ளியன்றும், அனுராக் சிங்கிடம் குடும்ப உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அனுராக் சிங் 5 பேரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொல செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget