மேலும் அறிய

சோகம்.. காவு வாங்கிய செம்பரம்பாக்கம் ஏரி..! மருத்துவக் கல்லூரியில் சேர இருந்த மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர தயாராக இருந்த மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் சுற்றி பார்க்க வந்த இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி  உயிரிழந்ததும், அவர்கள் நீட் தேர்வு தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் இறந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
செம்பரம்பாக்கம் ஏரி ( chembarambakkam lake )
 
சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குரு இவரது மகன் ரிஷிகேஷ் (18), விருகம்பாக்கம், லோகையா காலனியை சேர்ந்தவர் அரிஷ் (18), இருவரும் இவர்களது நண்பர்களான சென்னை மாங்காட்டை சேர்ந்த ரிஸ்வான்(18), சாம்(18), ஆகிய நான்கு பேரும் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர். 
 
உடல்நிலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்
உடல்நிலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்

 

சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள்
 
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் மீது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏரியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர் . அப்போது ரிஷிகேசும், அரிசும் செம்பரம்பாக்கம் ஏரியின் நான்காவது மதகின் கீழே இறங்கி நீரில் கால்களை விட்டு நனைத்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி இருவரும் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்கள்.
 
கால் தவறி ஏரியில்..
 
இதனை கண்டதும் அவரது நண்பர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியாமல் கூச்சல் போட்டனர். இருப்பினும் நீரில் மூழ்கியவர்களை மீட்க முடியாததால்,  இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
கதறி அழும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்
கதறி அழும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி கிடந்த ரிஷிகேஷ் மற்றும் ஹரீஷ் ஆகிய இருவரின் உடல்களையும் இறந்த நிலையில் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 
உடல்களை மீட்டு போலீஸ்
 
குன்றத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில்,  இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வும் தேர்ச்சி பெற்ற நிலையில் ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் கவுன்சிலிங் முடித்து விட்டு கல்லூரிக்காக காத்திருந்ததாகவும் தெரியவந்தது. இருவரும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பை தொடங்க இருந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது ஏரியில் மூழ்கி இருவரும் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
தொடரும் சோகம் - போலீஸ் எச்சரிக்கை
 
செம்பரம்பாக்கம் ஏரியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவப்பொழுது சுற்றி பார்க்கச் செல்லும் பொழுது, இது போன்ற விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இனி இது போன்ற சோக சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு தேவை என பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தடை செய்யப்பட்ட நீர் நிலையை அருகே செல்வதும், நீச்சல் தெரிந்தவர்களாக இருந்தாலும்,  பாதுகாப்பற்ற நீர் நிலைகளில் இறங்கி குளிப்பது ஆகியவை ஆபத்தை விளைவிக்கும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget