மேலும் அறிய

Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..

மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியது

உன்னவிட நா பெரிய ரவுடி ! நீயா நானா பெரியவர் என்ற போட்டியில் ஆண்லைனில் கத்தி ஆடர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொலை செய்த இருவர் கைது.
 
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வாலிபர் ஒருவரை வெட்டி கொலை செய்து வீசி சென்ற நிலையில் வாலிபர் சடலத்தை மீட்ட இரணியல் போலீசார் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை அடுத்த நான்கு வழிச்சாலையில் இரவு ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.
 
இதில் அந்த வாலிபர் அலறி சத்தம் போட்டுள்ளார்.அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த பகுதிக்கு வந்த நிலையில் வாலிபரை வெட்டிய அந்த மூன்று பேர் கும்பல் வாலிபரை அங்கேயே போட்டு விட்டு ஆட்டோவில் தப்பியோடியது.
 

Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..
 
இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து கிடந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் உடலில் ரத்த கறையுடன் போதையில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் அந்த வாலிபர் முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த அசோக் என்பதும் தெரியவந்தது.

Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..
 
தொடர் விசாரணையில் தனது நண்பர் அஜின் ஜோஸும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரீகன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் இருவரும் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் இதில் ரீகன் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார் , ரீகன் மற்றும் அஜின் ஜோஸ் இருவரும் சேர்ந்து அடிக்கடி சுங்கான்கடை பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்துவது வழக்கம் அப்படி மது அருந்திவிட்டு போதையில் ரீகன் அஜின் ஜோஸ் ஐ நீ என்ன டா பெரிய ரவுடி நான் தான் பெரிய உன்ன விட பெரிய ரவுடி என்றும் தரக்குறைவாக பேசியதால் ரீகனை கொலை செய்தால் அவனை விட நாம் பெரிய ரவுடி ஆகிவிடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அஜின் ஜோஸும் அசோக்கும் திட்டமிட்டுள்ளனர்.
 
கொலை செய்ய தேவையான கத்தியை ஆண்லைனில் ஆர்டர் செய்த அஜின் ஜோஸ் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரீகனுக்கு மது வாங்கி கொடுத்து ஆட்டோவில் சுங்கான்கடை நான்கு வழிச்சாலை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
 
அங்கு போதை தலைக்கேறிய ரீகன் அசோக் பிடித்து வைக்க அஜின், ரீகன் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அசோக் போலீசார் விசரானையில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அஜின் ஜோஸ் மற்றும் அசேக் ஐ கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தலைப்பு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget