மேலும் அறிய

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

ஆரணி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து தூக்கி எறியப்பட்டிருப்பதால் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றின் அருகே தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற பிரசித்தி பெற்ற அருள்மிகு புத்திரகாமீட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் மாநிலம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் வந்து புத்திர பாக்கியம் வேண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.மேலும் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ளூர் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் ஆலயம் 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கினால் பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய வராத நிலையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்மன் சிலைகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் அமைக்கப்பட்டு தினந்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்று வருவது வழக்கமாகும். நேற்றிரவு சமூக விரோதிகள் அந்த ஆலயத்தில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து ஆலயத்தின் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து அந்த சிலையை ஆலயத்தின் வளாகத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

மேலும் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தின் கடந்த ஆண்டு தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் திருமண மண்டபத்தின் கண்ணாடியும் உடைத்துள்ளனர். இன்று காலை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக ஆரணி நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த ஆரணி நகர காவல் நிலைய காவல்துறையினர் ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து அந்தச் சமூக விரோதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

பக்தர் கோபி என்பவரிடம் கேட்டபொழுது, தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் யாகம் வேண்டி  ராமர் முதலான சத்புத்தரர்கள் பிறந்ததாக சொல்லப்படும் சிறப்புடையதாகும். சப்தகாரிகள் சொல்லக்கூடிய பிரம்மி,  மாகேஷ்வரி, கௌவுமாரி, வைஷ்ணவி, வாராகி இந்திராணி, சாமுன்டி என்று சொல்ல கூடிய சப்த மாதாக்கள் ஒரே கல்லில் வடித்தல் கருவறையில் உள்ள ஒரே கல்லினை சமுக விரோதிகள் சிதைத்து எடுத்துவெளியே வீசியுள்ளனர். இதுமட்டுமின்றி கோவிலுக்கு அருகாமையில் திருமண மண்டபத்தின் முன் ஜன்னல் கதவினை சமூகவிரோதிகள்  உடைத்துள்ளனர்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை
கோபி

இதனால் உடைந்த  கல்லினை  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிசெய்து தரவேண்டும். மேலும் காவல்துறையினர் இந்த பகுதியில் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
Pawan Kalyan: “தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
“தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
Embed widget