மேலும் அறிய

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

ஆரணி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து தூக்கி எறியப்பட்டிருப்பதால் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றின் அருகே தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற பிரசித்தி பெற்ற அருள்மிகு புத்திரகாமீட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் மாநிலம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் வந்து புத்திர பாக்கியம் வேண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.மேலும் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ளூர் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் ஆலயம் 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கினால் பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய வராத நிலையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்மன் சிலைகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் அமைக்கப்பட்டு தினந்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்று வருவது வழக்கமாகும். நேற்றிரவு சமூக விரோதிகள் அந்த ஆலயத்தில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து ஆலயத்தின் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து அந்த சிலையை ஆலயத்தின் வளாகத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

மேலும் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தின் கடந்த ஆண்டு தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் திருமண மண்டபத்தின் கண்ணாடியும் உடைத்துள்ளனர். இன்று காலை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக ஆரணி நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த ஆரணி நகர காவல் நிலைய காவல்துறையினர் ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து அந்தச் சமூக விரோதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

பக்தர் கோபி என்பவரிடம் கேட்டபொழுது, தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் யாகம் வேண்டி  ராமர் முதலான சத்புத்தரர்கள் பிறந்ததாக சொல்லப்படும் சிறப்புடையதாகும். சப்தகாரிகள் சொல்லக்கூடிய பிரம்மி,  மாகேஷ்வரி, கௌவுமாரி, வைஷ்ணவி, வாராகி இந்திராணி, சாமுன்டி என்று சொல்ல கூடிய சப்த மாதாக்கள் ஒரே கல்லில் வடித்தல் கருவறையில் உள்ள ஒரே கல்லினை சமுக விரோதிகள் சிதைத்து எடுத்துவெளியே வீசியுள்ளனர். இதுமட்டுமின்றி கோவிலுக்கு அருகாமையில் திருமண மண்டபத்தின் முன் ஜன்னல் கதவினை சமூகவிரோதிகள்  உடைத்துள்ளனர்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை
கோபி

இதனால் உடைந்த  கல்லினை  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிசெய்து தரவேண்டும். மேலும் காவல்துறையினர் இந்த பகுதியில் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget