மேலும் அறிய

Crime : மயக்க மருந்து இன்றி.. கட்டாயப்படுத்தி.. 32 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. பதைபதைக்க வைத்த கொடூரம்..

மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மயக்க மருந்து அளிக்காமல் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 பெண்களுக்கு கட்டாயத்தின் பேரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மயக்க மருந்து அளிக்காமல் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அலௌலி பிளாக்கில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ககாரியா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையை விரைவில் முடிக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ககாரியா மாவட்ட சுகாதார தலைவர் சர்ஜன் அமர்கந்த் ஜா கூறுகையில், "சமீபத்தில், அலௌலியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 23 பெண்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 30 பெண்கள் இந்த செயல்முறைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டனர். 

ஆனால், ஏழு பேர் அச்சம் காரணமாக மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மோசமான மருத்துவ அலட்சியம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. மயக்க மருந்து இல்லாமல் பெண்களை எப்படி அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்த முடியும்? 

மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விசாரணை நடத்தப்பட்டு, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், "அந்த கொடூரமான சம்பவத்தை நான் நினைவில் கொள்ள விரும்பவில்லை. நான் வலியால் கத்தினேன். நான்கு பேர் என் கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பிடித்தனர்.

ஆனால், டாக்டர் வேலையை முடித்துவிட்டார். ஆரம்பத்தில், தாங்க முடியாத வலியைப் பற்றி மருத்துவரிடம் கேட்டபோது, ​​​​அது அப்படிதான் நடக்கும் என்று கூறினார்" என்றார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் இதுகுறித்து பேசுகையில், "அறுவை சிகிச்சை முழுவதும் சுயநினைவுடன் இருந்தேன். பெரும் வலியை அனுபவித்தேன். ஃபலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுப்பதே tubectomy ஆகும்" என்றார்.

அரசின் நிதி உதவியில் தனியார் நிறுவனம் நடத்தும் முகாமில்  குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget