மேலும் அறிய

Crime : மயக்க மருந்து இன்றி.. கட்டாயப்படுத்தி.. 32 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. பதைபதைக்க வைத்த கொடூரம்..

மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மயக்க மருந்து அளிக்காமல் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 பெண்களுக்கு கட்டாயத்தின் பேரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மயக்க மருந்து அளிக்காமல் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அலௌலி பிளாக்கில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ககாரியா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையை விரைவில் முடிக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ககாரியா மாவட்ட சுகாதார தலைவர் சர்ஜன் அமர்கந்த் ஜா கூறுகையில், "சமீபத்தில், அலௌலியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 23 பெண்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 30 பெண்கள் இந்த செயல்முறைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டனர். 

ஆனால், ஏழு பேர் அச்சம் காரணமாக மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மோசமான மருத்துவ அலட்சியம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. மயக்க மருந்து இல்லாமல் பெண்களை எப்படி அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்த முடியும்? 

மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விசாரணை நடத்தப்பட்டு, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், "அந்த கொடூரமான சம்பவத்தை நான் நினைவில் கொள்ள விரும்பவில்லை. நான் வலியால் கத்தினேன். நான்கு பேர் என் கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பிடித்தனர்.

ஆனால், டாக்டர் வேலையை முடித்துவிட்டார். ஆரம்பத்தில், தாங்க முடியாத வலியைப் பற்றி மருத்துவரிடம் கேட்டபோது, ​​​​அது அப்படிதான் நடக்கும் என்று கூறினார்" என்றார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் இதுகுறித்து பேசுகையில், "அறுவை சிகிச்சை முழுவதும் சுயநினைவுடன் இருந்தேன். பெரும் வலியை அனுபவித்தேன். ஃபலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுப்பதே tubectomy ஆகும்" என்றார்.

அரசின் நிதி உதவியில் தனியார் நிறுவனம் நடத்தும் முகாமில்  குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க- இபிஎஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Embed widget