மேலும் அறிய

திருச்சியில் பரபரப்பு.... மாடியில் இருந்து குதித்து நர்ஸ் தற்கொலை

தனியார் மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து குதித்து நர்ஸ் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், வயலூர் ரோடு குமரன்நகர் பஸ் நிறுத்தம் அருகே ரத்னா மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை சாந்தபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதாலட்சுமி (வயது 19) நர்ஸாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை, இவர் வழக்கம் போல் பெற்றோரிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றார். அங்கு அவர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதன்பின் மதியம் 3 மணி அளவில் நிவேதாலட்சுமி மருத்துவமனையின் 5-வது மாடிக்கு படி வழியாக ஏறி சென்றார். இதைத்தொடர்ந்து அவர் திடீரென்று 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது அருகில் இருந்த மின்சார கம்பி உடலில் பட்டது. தொடர்ந்து அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பலர் நிவேதா லட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த நிவேதா , லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு நிவேதா லட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். எங்கள் மகள் தற்கொலை செய்து இருக்கமாட்டாள்.


திருச்சியில் பரபரப்பு.... மாடியில் இருந்து குதித்து  நர்ஸ்  தற்கொலை

மேலும் அவரது சாவில் சந்தேகம் உள்ளது. அவர் வேலை பார்த்த ரத்னா மெடிக்கல் சென்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தில்லைநகர் போலீஸ் உதவி கமிஷனர் ராஜூ மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ரத்னா மெடிக்கல் சென்டர் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, வயலூர் ரோடு பகுதியில் உள்ள ரத்னா மெடிக்கல் சென்டரில் நர்சாக பணியாற்றி வரும் நிவேதாலட்சுமி இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் இவர் நேற்று மதியம் 3 மணியளவில் அவர் வேலை செய்யும் மெடிக்கல் சென்டரின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதல் கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றனர். 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
Embed widget